அகிலத்திற்கு வழிகாட்ட வந்த அல்குர்ஆன் இபாதத்துகளைப் பற்றிப் பேசியதை விட இறைவனின் வல்லமையைப் பற்றி, அருட்பாக்கியங்களைப் பற்றி நிறைய பேசுகிறது.
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ,وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ
وَالشَّمْسُ
تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
وَالْقَمَرَ
قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيم
لا
الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلا اللَّيْلُ سَابِقُ
النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
வானம், பூமி மட்டுமல்ல, கடலையும், கப்பலையும் பற்றிகூட பேசுகிறது.
وَآيَةٌ لَّهُمْ أَنَّا
حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ
உலகமே
எதிர்நோக்கும் சவால் தண்ணீர்.
அதைப்பற்றியும் தெளிவாகப் பேசுகிறது. இன்னும் பத்து
வருடங்களில் தண்ணீர்ச் சண்டைதான் பெரிதாக வளரும் என்றும், 2025ல் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் தண்ணீர்ப் பிரச்சனையால்
பலகீனப்பட்டுப் போவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.
காலநிலை
மாற்றங்கள், மக்கள் பெருக்கம், காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் போன்ற காரியங்களால் தண்ணீர் தட்டுப்பாடு இன்று பரவலாகியிருக்கிறது, என்ற உலகச் சிந்தனையை ஒருபுறம் ஏற்றுக் கொண்டாலும், இறைமறை மிகத் தெளிவாக ஒரு செய்தியை முன்வைக்கிறது.
وَأَنزَلْنَا مِنَ
السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ
لَقَادِرُونَ
தண்ணீர் தேசம்:
பூமியின் உத்தேச மொத்த நீர்க்கொள்ளளவு (உலக நீர் வினியோகம்) 326,000,000மில்லியன் கன அடிகள்.
இதில் 97.2% கடலில் உள்ளது, 0.9% நிலத்தடி நீர், 1.8% பனிப்பாறைகள்.
0.02% ஏரிகள், நதிகளின் நன்னீராகும்.
நிலத்தடி நீரும், நன்னீரும் மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும்.
அதாவது 326,000,000மில்லியன் கன அடிகளில் நமக்கு பயன்படுவது வெறும் 60000 மில்லியன் கனஅடிகள் தான்.
கடல் நீரை நீக்கிவிட்டால் இரண்டரை சதவீதம் மட்டும்தான் நம்முடைய பயன்பாடு.
ஆக, உலகில் தேவைக்குப் போதுமான அளவு தண்ணீர் சப்ளையாகிக் கொண்டிருக்கிறது. மனித உடல் பருமனுக்கேற்றவாறு 60 முதல் 70% நீரால் ஆனது. தாவரங்களில் 90 சதவீதம் நீருள்ளது. நன்கு வளர்ந்த ஜெல்லி மீன்களில் 98 சதவீதம் நீருள்ளது.
وَأَنزَلْنَا مِنَ
السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ
لَقَادِرُونَ
வீடு
கட்ட முடியாது, விவசாயம் செய்யமுடியாது, ஜீவராசிகள் வாழமுடியாது. “பூமி ஒரு நீர் உடம்புக்காரி” என்பதுதான் உண்மை.