Thursday 24 October 2013

விவாக ...........ரத்துகள்!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன.விவாகரத்துஜீவனாம்சம்குழந்தைகள்மீதான உரிமைமீண்டும் சேர்ந்துவாழ விருப்பம்ஆகிய வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.

இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின்எண்ணிக்கை 2,570ஆக இருந்ததுஇது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரைமட்டுமே 3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன.

இவ்வாறு இரு மடங்காகமும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேசெல்கிறதுஇந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமேநீதிமன்றம்வரை வராமல்சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள்பஞ்சாயத்துகளில்அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும்விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால்பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்லட்சத்தைஎட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

முந்தைய தலைமுறையில் காணப்படாத இந்த அலங்கோலம்இன்றைய இளைய தம்பதியரிடையேபரவக் காரணமென்னஇத்தனைக்கும் இந்த இளம் தம்பதியர் படித்தவர்கள்பட்டம் பெற்றவர்கள்;பெரிய பணிகளில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்வாழ்க்கை வசதிகளைக் குறைவின்றிஅனுபவிப்பவர்கள்திட்டம்போட்டு இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்பவர்கள்.

சுருங்கக்கூறின்எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதிஅமைதிமகிழ்ச்சி,முறுவல்… என எதுவும் இல்லைஆனால்பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தையதலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லைகாரணம் என்ன?

வாழ்க்கைப் பாடம்

படிப்பறிவு இல்லாதஅல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்ததுநிதானம்இருந்ததுஎதார்த்த வாழ்க்கை என்னகுடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள்அறிந்திருந்தார்கள்குடும்பம் சிதறிவிடக் கூடாதுகட்டுக்கோப்பு குலைந்துவிடக் கூடாது என்பதற்காகஉரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்பள்ளிப் பாடம் இல்லையே தவிரவாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது.

இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை.சுயநலம் ஒன்றைத் தவிரகுடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத்தோன்றுவதில்லைஎதிலும் அவசரம்எதையும் உடைத்துவிடும் வறட்டுத் துணிச்சல்தன் சுகத்தைத்தவிரஎதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலைஅவர்களின் ஏட்டுப் படிப்புபணம்சம்பாதிக்க உதவுவதைப் போன்றுசம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை.

திருமணம்

முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்என்பதுஒரு வலுவான ஒப்பந்தம்அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றநீடித்திருக்க வேண்டிய புனிதஇணைப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும்அதை எளிதில் அறுத்தெறியக் கூடாது.

அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத்திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியானமிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள்தம் கணவன்களிடமிருந்து திருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

நபி (ஸல்அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய பேருரையில்பெண்கள் விஷயத்தில்அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள்அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக்கரம் பிடித்துள்ளீர்கள்அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமைபெற்றுள்ளீர்கள் என்று கூறினார்கள். (அபூதாவூத்இப்னு மாஜா)

ஆகஅல்லாஹ்வை முன்வைத்து செய்தகொள்ளப்பட்ட மண ஒப்பந்தத்தைப் பெரிதும் மதித்து நடக்கவேண்டும்தகுந்த காரணமின்றி அதை முறித்துப் போட்டுவிடலாகாதுதகுந்த காரணமேஇருந்தாலும்கூடஇயன்றவரை முறிக்காமலிருக்க வழியேதேனும் உண்டா என்றே பார்க்க வேண்டும்.

இதனாலேயேமணஒப்பந்தத்தை முறிக்கும் மணவிலக்கை (தலாக்), அனுமதிக்கப்பட்டஹலால்களிலேயே இறைவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத்)

மணமுறிவு ஏன்?

முதலில்மணவிலக்கு என்ற எண்ணம் வந்ததனாலேயே அந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதக் கூடாதுஏதோ ஒரு மருட்சிஅல்லது அழுத்தம் அந்த எண்ணம் தோன்றக் காரணமாகஇருந்திருக்கலாம்அதனால்அதற்குக் காரணம் என்ன என்று அலச வேண்டும்கணவனாகட்டும்;மனைவியாகட்டும்மணவிலக்கு எண்ணம் பிறக்கக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்னென்னஎன்பதை நிதானமாக அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.

அதாவது பிரிந்துவிட வேண்டும் என்ற உந்துதல் தம்பதியருக்குப் பிறக்கத் தூண்டுகோலாக அமைந்தஅகக் காரணிகள் என்னபுறக் காரணிகள் என்ன என்று அமைதியாக யோசித்துப்பார்க்க வேண்டும்.அக்காரணிகள் ஏன் இவையாக இருக்கக் கூடாது!

  1. தம்பதியரில் ஒருவர் மற்றவரின் உரிமையை மதிப்பதில்லைஇதையேஅவர் தமதுகடமையை உணரவில்லை என்றும் சொல்லலாம்ஒருவரின் உரிமைதான் மற்றவரின்கடமையாகிறது.
  2. ஒருவர் தமது உரிமைக்கு மேலாக மற்றவரிடம் எதிர்பார்ப்பதுஅதாவது மற்றவர்மீதுகடமையில்லாத ஒன்றைக் கடமைபோல் திணிப்பது.
  3. ஒருவருக்கொருவர் தம் உணர்வுகள்ஆசாபாசங்கள்தேவைகள்உடல் உபாதைகள்,மனஅழுத்தம்பற்றாக்குறை ஆகியவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
  4. இதனால்தான்தம்பதியர் மனம் திறந்து பேச வேண்டும்அவர்களுக்கிடையில் ஒளிவுமறைவுஇருக்கக் கூடாது என்கின்றனர்அதே நேரத்தில்வெளிப்படுத்தும் விதம் காயப்படுத்தாததாக,பக்குவமானதாக இருத்தல் அவசியம்.
  5. ஒருவருக்கு மற்றவர்மேலுள்ள அவநம்பிக்கைகோபம்சந்தேகம்தவறான எண்ணம்ஆகியவையே பெரும்பாலும் பிரிவுக்குக் காரணிகளாகிவிடுகின்றனஇவற்றைக் களையஇருவருமே முயல்வதில்லைஅல்லது ஒருவர் முயன்றால்மற்றவர் வாய்ப்பளிப்பதில்லை.

எண்ணங்களில் சில பாவமாகும் (49:12) என்கிறான் இறைவன்.

பெரும்பாலும் சந்தேக நோயே மணவிலக்கிற்குக் காரணமாகிறதுருசி பார்க்கும் ஆண்களையும் ருசிபார்க்கும் பெண்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (முஸ்னது அல்பஸ்ஸார்தப்ரானீ)

அதாவது பாலியல் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, வேறு துணையை நாடுவோரை அல்லாஹ்விரும்பமாட்டான்.

5.        கணவன்மனைவி இருவரில் ஒருவர்மீது குற்றம் குறை இருப்பின் மற்றவர் அதைப்பெருந்தன்மையோடு சகித்துக்கொள்ளாமல்தடாலடியாக எதிர் நடவடிக்கையில் இறங்கிவிடுவதுபிரிவுக்குக் காரணமாகிவிடுகிறதுகுறையை மறைப்பதிலும் குற்றங்களை மன்னிப்பதிலும் நிறையநன்மைகள் இருக்கலாம்.

ஒன்றை நீங்கள் வெறுப்பீர்கள்உங்களுக்கே தெரியாமல் அதில் ஒன்றல்லபல நன்மைகள்இருந்துவிடக்கூடும்.

“(இல்லற வாழ்க்கையில்அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.அவர்களை நீங்கள் வெறுத்தாலும் (பொறுமையைக் கடைப்பிடியுங்கள்ஏனெனில்,)நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். (ஆனால்,) அதில் அல்லாஹ் அதிகமான நன்மைகளைவைத்திருக்கலாம் (4:19) என்று அறிவுரை கூறுகிறது அருள்மறை குர்ஆன்.

அதாவது மனைவியை நீங்கள் வெறுத்தபோதும் அவளை வீட்டிலிருந்து விரட்டிவிடாமல்,பொறுமையோடு அவளுடன் குடும்பம் நடத்துங்கள்அவ்வாறேகணவன் பிடிக்கவில்லை என்று தாய்வீட்டிற்கு ஓடிவிடாதீர்கள்பொறுமையோடு அவனுடன் வாழுங்கள்அதனால் இம்மையிலும்மறுமையிலும் உங்களுக்கு அதிகமான நன்மைகள் விளையலாம்.

சேறுபட்டுவிட்ட துணியைச் சற்று காய விட்டுவிட்டால்இலேசாகத் தட்டிவிட்டாலே மண்உதிர்ந்துவிடும்ஈரத்தோடு உடனுக்குடன் அகற்ற முனைந்தால்சேறு பரவும்அகற்றுவது கடினம்.

இதனால்தன் நபித்தோழரும் குர்ஆன் அறிஞருமான இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் இவ்வாறுகூறினார்கள்மனைவியிடம் கணவன் அன்போடு நடந்துகொள்ள வேண்டும்அவள்மூலம் அவனுக்குப்பிறக்கும் குழந்தை வாயிலாக அவனுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. (இப்னுகஸீர்)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்இறைநம்பிக்கை கொண்ட ஓர்ஆண் இறைநம்பிக்கை கொண்ட ஒருபெண்ணை அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டாம்அவளிடமுள்ள ஒரு குணத்தை அவர்வெறுத்தாலும்மற்றொரு குணத்தால் திருப்தி அடையட்டும்! (முஸ்லிம்)

முன்கோபம் உள்ளவளிடம் கற்பொழுக்கம் இருக்கலாம்கஞ்சனிடம்கெட்ட வழியில் செலவழிக்கும்பழக்கம் இல்லாமலிருக்கலாம்.

அவ்வாறேமனைவியும் கணவனின் குறைகளை நயமாகச் சுட்டிக்காட்டி திருத்த முயல வேண்டுமேதவிரஎடுத்ததற்கெல்லாம் ‘குலா’ கேட்கும் தவறைச் செய்யக் கூடாது.

நபி (ஸல்அவர்கள் கடுமையானதோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்கட்டாயமும் நெருக்கடியும்இல்லாமல் கணவனிடம் எந்தப் பெண் ‘தலாக்’ கோருகிறாளோ அவளுக்குச் சொர்க்கத்தின் வாடைகூடதடுக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

மேற்சொன்ன காரணிகளை ஆய்வு செய்துஅவற்றைத் தம்பதியரே நிவர்த்தி செய்ய முடியும்.மூன்றாவது ஆளின் தலையீடே இல்லாமல் இருவரும் பேசி சுமுக முடிவு காணலாம்மனம்இருப்பின் மார்க்கம் உண்டு.

அப்படியே இருவரால் தீர்க்க முடியாதுபோனால்நடுவர் ஒருவரை அணுகலாம்அவர் நல்லமனிதராகவும் இருவரின் நலன்மீதும் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும்இதன்படி,மனைவி தரப்பில் ஒருவரும் கணவன் தரப்பில் ஒருவரும் நடுவர்களாக இருந்து உளப்பூர்வமாகமுயன்றால் வெற்றி நிச்சயம்.

அவ்விருவரும் நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் அத்தம்பதியருக்கிடையேநல்லிணக்கத்தை ஏற்படுத்துவான் (4:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மணவிலக்கின் பின்விளைவுகள்

சரிஅப்படியே பிரிந்துவிடுவது எனத் தம்பதியர் இருவரும் மனதளவில் முடிவெடுத்துவிட்டார்கள் எனவைத்துக்கொள்வோம்அப்போதுகூடசில உண்மைகளை அவர்கள் சீர்தூக்கிப்பார்த்தால்மணவிலக்குஎவ்வளவு கசப்பானது என்பது புரியும்.

மணவிலக்கிற்குப்பின் ஒரு சுமுகமான வாழ்வு அமைவதென்பது சுலபமான காரியமல்லவீட்டையோவாகனத்தையோ வேலைபார்க்கும் இடத்தையோ நினைத்தவுடன் மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல,வாழ்க்கைத் துணையை மாற்றுவதென்பதுஅதிலுள்ள சுடுகின்ற எதார்த்தங்களை இதோஎண்ணிப்பாருங்கள்!

1. தம்பதியரில் இருவருக்குமோஅல்லது இருவரில் ஒருவருக்கோ பிரிவுக்குப்பின் தனிமை வாழ்க்கைவாழ வேண்டிய கட்டாயம் நேரலாம்மறுமணம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.தனிமைமனிதனைக் குற்றம் செய்யத் தூண்டலாம்கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்றதுணிச்சலே மனிதனைப் படுகுழியில் தள்ளிவிடும்.
அவ்வாறே தனிமைமனஅழுத்தத்தையும் விரக்தியையும் தரவல்லதுகண்டதையும் சிந்தித்தேஉடலையும் உள்ளத்தையும் கெடுத்துக்கொள்ள நேரும்வேண்டாத நட்பையும் தீய பழக்கங்களையும்தனிமை தேடிக் கொடுத்துவிட அதிக வாய்ப்பு உண்டு.

2. இதையெல்லாம்விடகணவன் – மனைவி இடையிலான பிரிவு குழந்தைகளைப் பாதிப்பதுதான்மிகவும் கொடுமைதாயின் அன்புஅல்லது தந்தையின் பரிவுஅல்லது இரண்டுமே கிடைக்காததுர்நிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடும்.
ஆம்தாய்தந்தை இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் நெருக்கடியைக் குழந்தைகள்சந்திப்பார்கள்இரு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்று கேட்பதற்குச் சமம் இதுகுழந்தையாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவர்களின் அரவணைப்பு கிடைக்கலாம்அந்த அரவணைப்புகூடஎத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாதுமற்றவரை அவ்வப்போதுதான் பார்க்கவேமுடியும்சில வேளைகளில் பார்ப்பதற்குக்கூட தடை வரலாம்!

பெற்றோரின் பிரிவைச் சரிவர புரிந்துகொள்ளாத குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப் படுவர்அந்தஏக்கம் வெறியாக மாறிபெற்றோருக்கெதிராகத் திரும்பினாலும் வியப்பதற் கில்லைமுறையானவளர்ப்பும் இயல்பான அன்பும் கிடைக்காதபோது குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறவும்இடமுண்டு.

3. விவாகரத்து ஏற்பட்டால் பொருளாதாரச் செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காதுவிவாகரத்து வழக்குநீதிமன்றம்வரை செல்லக்கூடும்அப்போது கணவன் – மனைவி இருவர் தலையிலும் நீதிமன்றச்செலவுகள்வழக்குரைஞர் கட்டணம் முதலான செலவுகள் விழும்.

மனைவியின் ‘இத்தா’ காலத்திற்குக் கணவன் தனியாக ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.மனைவிக்கும் கணவனுக்கும் சொந்தமான சொத்துகள்உடைமைகள் ஆகியவை கலந்துபோயிருந்தால்,அவற்றைத் தனித்தனியாககப் பிரித்து உரியவருக்கு ஒப்படைத்தாக வேண்டும்அதில்இருவருக்குமிடையே பிரச்சினை தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.

சுமுகமாகவே பிரித்துக்கொண்டாலும்ஒன்றாக இருந்த சொத்துஆளுக்கு இவ்வளவு எனப்பிரியும்போது பலம் குன்றத்தானே செய்யும்வசதிகள் குறையத்தானே செய்யும்மணவிலக்கும்பிரிவும்தானே இதற்குக் காரணம்சேர்ந்து வாழ்ந்தால் இதற்கு இடமில்லையே!

மறுமணத்திற்குப்பின்

பழைய உறவை உதறித்தள்ளியவர்கள்புதிய உறவை நாடிச்சென்று மறுணைம் செய்துகொள்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்புதிய உறவும் மறுமணச் சூழலும் எவ்வாறு அமையும்என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

புதியவன்அல்லது புதியவள் எப்படி இருப்பாரோயார் கண்டதுபழைய துணையை விடப் புதியதுணை மோசமாக இருந்துட்டால்…? எலிக்குப் பயந்து புலிக்கு இரையான கதையாகிவிடும்அல்லது களை பிடுங்கப்போய் நிலம் பிளந்த கதையாகிவிடும். புதியவர் பழைய வாழ்க்கையைச்சொல்லிக்காட்டிகுத்திக் காயப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்அதைப் போன்றதொருசித்திரவதை வேறு உண்டாசொல்லுங்கள்!

அது மட்டுமாஊர் வாயை யார் மூடுவதுஅவரவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசித்தீர்ப்பார்களா,இல்லையாதுக்கம் விசாரிப்பதைப் போன்றுகேள்வி கேட்டே பிராணனை வாங்கிவிடுவார்கள்.சொன்னாலும் தொல்லைசொல்லாவிட்டாலும் தொல்லைதேவைதானா இந்த அனுபவம்?

குர்ஆன் கூறும் ஒழுங்குமுறை

சரிபிரிவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எல்லையை எட்டிவிட்டது நிலைமை,மணவிலக்குதான் தீர்வு என்ற முடிவுக்கும் வந்தாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.அப்போதுகூடகுர்ஆன் கூறும் அழகிய வழிமுறையைப் பின்பற்றுவதை விடுத்துகண்மூடித்தனமாகஏன் முத்தலாக்’ சொல்ல வேண்டும்?

அல்லாஹ் காட்டியுள்ள வழியைப் பின்பற்றினால்பிரிந்த உள்ளங்கள் இணைவதற்குக்கூட அதிகவாய்ப்பு உண்டுஅது மட்டுமன்றி, ‘நபிவழி (சுன்னத்தலாக்’ எனப்படும் முறையைக் கையாண்ட பேறுகிடைக்கும்முறிவைக்கூட முறையாகச் செய்வதுதானே முறைஅது என்ன ஒழுங்குமுறை என்பதைப்பார்ப்போமா?

அல்லாஹ் கூறுகிறான்: (மனைவியைத் திரும்ப அழைக்க உரிமையுள்ள) ’தலாக்இரண்டேதான்பின்னர் முறைப்படி சேர்ந்து வாழலாம்அல்லது நன்முறையில்(அவளைவிடுவித்துவிடலாம். (2:229)

1. ஒரே மூச்சில் மூன்று தலாக்கைப் பயன்படுத்தாமல்முதலில் ஒரு ‘தலாக்’ மட்டுமே சொல்ல வேண்டும்.

2.  அதையும்மாதவிடாய் நாட்கள் முடிந்து மனைவி தூய்மை அடைந்த நிலையிலேயே சொல்லவேண்டும்அவ்வாறேபிரசவ இரத்தப்போக்கு நின்றுமனைவி தூய்மையாக இருக்கும்போதுதான்சொல்ல வேண்டும்அப்போதுதான்மனைவியின் காத்திருப்புக் காலமான ‘இத்தா’ காலம் நீளாமல்கணக்கோடு முடியும்இப்னு உமர் (ரலிஅவர்கள் மாதவிடாயிலிருந்த தம் துணைவியாரைமணவிலக்குச் செய்த தகவல் தெரிந்தபோதுதிரும்ப மீட்டுக்கொள்ளுமாறு நபி (ஸல்அவர்கள்ஆணை யிட்டார்கள். (புகாரீ)

3. தாம்பத்திய உறவு கொண்ட புதிதில் மனைவியைக் கணவன் மணவிலக்குச் செய்யக் கூடாது.காரணம்அந்த உறவில் மனைவி கர்ப்பமடைந்திருக்க வாய்ப்பு உண்டுகுழந்தையைப்பெற்றுக்கொடுக்கும்வரை ‘இத்தா’ காலம் நீளும் அபாயம் உண்டு.

4.  கர்ப்பிணி மனைவிக்கு தலாக் சொல்லக் கூடாது. ‘இத்தா’ காலம் நீளும் என்பதே இதற்கும் காரணம்.மனஉளைச்சலுடன் கர்ப்பக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்இது தாய்சேய்இருவருக்கும் நல்லதல்ல.

5. தலாக்’ சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருப்பில் (‘இத்தா’) இருக்க வேண்டும்.அதாவது மறுமணம் செய்யாமல் காததிருக்க வேண்டும்மாதவிடாய் ஏற்படாத பெண்ணாக இருந்தால்மூன்று மாதங்கள் ‘இத்தா’ மேற்கொள்ள வேண்டும்கர்ப்பிணி பிரசவமாகும்வரை ‘இத்தா’ இருக்கவேண்டும்மணமாகி இல்லறச் சுகம் அனுபவிக்காத பெண்ணுக்கு இந்தக் காத்திருப்பு (இத்தாஇல்லை.

இத்தா’ காலத்தில் கணவன் இல்லத்தில் மனைவி இருப்பதுதான் முறையாகும்அக்காலத்திற்கானஉணவுஉடை உள்ளிட்ட வசதிகளைச் செய்துதருவது – அதாவது ஜீவனாம்சம் வழங்குவது –கணவனின் பொறுப்பாகும்.

தலாக்கின் சரியான நடைமுறை

1.        முதல் தலாக் சொல்லப்பட்ட பெண் ‘இத்தாவில் இருக்கும் காலத்தில் இருவருக்கும் மனமாற்றம்ஏற்பட வாய்ப்பு உண்டுஒரே வீட்டில் இருந்துகொண்டுஇருவரது வாய் பேசாவிட்டாலும் கண் பேசலாம் அல்லவாஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் மனம் மாறிவிடாதாஇருவரும் மீண்டும்இணைய எண்ணலாம் அல்லவாஅப்படி சேர்ந்து வாழ விரும்பினால் எந்தச் சம்பிரதாயமுமின்றிதாராளமாகச் சேர்த்துகொள்ளலாம்.

இதற்கு ‘மீட்டுக்கொள்ளும் தலாக்’ (ரஐயீ தலாக்என்று பெயர். ‘இத்தா’ காலமே முடிந்துவிட்டாலும்கவலைப்பட வேண்டியதில்லை. ‘இத்தா’ முடிந்துவிடின்தலாக் ‘பாயின்’ (பிரிவுஆகிவிடும்எனவே,இருவரும் திருமண ஒப்பந்தத்தைப் புதிப்பித்துக்கொண்டாலே போதும்இருவரும் சேர்ந்து வாழலாம்.அல்லது அப்படியே பிரிந்துபோய், மறுமணம் செய்து கொண்டோ தனியாகவோ வாழ்ந்துகொள்ளலாம்.

அவ்வாறு இருவரும் சேர்ந்து வாழும் நாட்களில் இருவரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு,சுமுகத்தீர்வு காண முடியாத அளவுக்கு நிலைமை முற்றிபிரிவுதான் வழி என்ற முடிவுக்குவரும்போது கணவன் இரண்டாவது ‘தலாக்கைப் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டாவது ‘தலாக்’ சொல்லப்பட்ட பிறகும் மனைவி மூன்று மாதவிடாய்க் காலம் ‘இத்தாமேற்கொள்ள வேண்டும்கணவனின் இல்லத்தில்அவனது பராமரிப்பில் மனைவி ‘இத்தாஇருந்துவரும் நாட்களில் இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம். ‘இத்தா’ காலம்முடிந்துவிட்டாலும்கூட பிரச்சினை இல்லைஇருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால்,திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு இணைந்து வாழ முடியும்.

தம்பதியர் முற்றாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை வாய்ப்புகள்எத்தனை வழிகள்!இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதில்தான் இறைவனுக்கு எத்தனை கருணை!இல்லறத்திற்கு நல்வழி காட்டிய நபிகளாருக்குத்தான் எத்தனை அக்கறைஇந்தசன்மார்க்கத்திற்குத்தான் எத்தனை ஆர்வம்!

இந்த அரிய வாய்ப்புகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டுதடாலடியாக ஒரே மூச்சில்முத்தலாக்கைப் பயன்படுத்தும் இளைய தம்பதிகளை என்னவென்பதுஆத்திரப்பட்டு அவசரமாக மூன்றுதலாக்கையும் ஒரே தடவையில் கொட்டித் தீர்த்துவிட்டுபின்பு மனம் திருந்தி சேர்ந்து வாழவிரும்புகிறோம் என்று மார்க்கத் தீர்ப்புக் கேட்டு அலைவோரை என்னவென்பது!

இரண்டாவது ‘தலாக்’ சொன்ன பிறகு மீண்டும் சேர்ந்து வாழும்போது தம்பதியருக்கு மத்தியில்பிணக்கு ஏற்படின்சுமுகமாகத் தீர்வு காணவே முயல வேண்டும்ஏனெனில்சச்சரவு முற்றி,பிரிவதுதான் வழி என்ற நிலை ஏற்படின் மூன்றாவது வாய்ப்பைக் கணவன் பயன்படுத்திமூன்றாம்தலாக் சொல்லாம்ஆனால்இதுதான் இறுதியான தலாக்இனி சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம்.

மனைவி மூன்று மாதவிடாய்க் காலம் ‘இத்தா’ மேற்கொள்ள வேண்டும் அதன்பின் வேறொரு ஆணைஅவள் மணக்க வேண்டும்புது இல்லறம் கண்ட அவ்விருவருக்கிடையே பிணக்கு ஏற்பட்டுஇயல்பாகமணவிலக்கும் உண்டாகிஅதற்கான ‘இத்தா’ முடிந்த பிறகே பழைய கணவனை அந்த மனைவிமீண்டும் மணந்துசேர்ந்து வாழ முடியும்இந்தக் கசப்பான அனுபவம் தேவைதானாஇதேநிலைதான்முத்தலாக்கை ஒரே நேரத்தில் பாவித்துவிட்டுமீண்டும் சேர்ந்து வாழ விரும்பும்தம்பதியரும் சந்திக்க வேண்டியுள்ளது.

இப்போது சொல்லுங்கள்! ‘தலாக்’ சொல்லும் உரிமையைப் படிப்படியாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாகச்சொல்கின்ற ‘சுன்னத்தான’ இந்த நடைமுறை சிறந்ததாஅல்லது ஒரேயடியாக முத்தலாக்’ சொல்லும்பித்அத்தான முறை சிறந்ததா?

தலாக் சொன்னபின்பும் சிரமமின்றி மீண்டும் சேர்ந்து வாழ்கின்ற நான்கு வாய்ப்புகளை வழங்கும்நபிவழி’ முறை மேலானதாஅல்லது அந்த வாய்ப்புகளுக்கே இடமளிக்காதஒரேயடியாகக் கதவைஇழுத்து மூடும் ‘அநாசார’ முறை மேலானதா?

தம்பதியர் வாழ்வில் பிரச்சினையே ஏற்பட்டாலும் மூன்றாவது ஆளின் தலையீட்டிற்கு வழியேஇல்லாதகுர்ஆன் கூறும் நடைமுறை அறிவார்ந்ததாஅல்லது ஊர் வாய்க்கு அவல் போடும்முட்டாள்தனம் அறிவார்ந்ததா?

இளம் தம்பதியரேநிதானமாக யோசியுங்கள்பஞ்சாயத்திற்கு இடம்வைக்காதீர்கள்குற்றவாளிக்கூண்டில் நிற்காதீர்கள்!

நன்றி; கான் பாகவி