Thursday 20 June 2013

வாங்கும் கடனும், திருப்பிக் கொடுக்கும் கடமையும்...!


                                                     கான மயிலாட கடன் வந்து மேலாட :
                                                     வாங்கியவன் கொண்டாட நானிங்கு திண்டாட :
இந்த வரிகள் நமது நாட்டின் தேசிய கீதம் போல் பல கடைகளில் எழுதப்பட்டிருக்கும். செருப்பு தைப்பவன் முதற்கொண்டு அதை உற்பத்தி செய்பவன் வரை கடனில்லாதவர்கள் இல்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் உண்டு.  கடனை நிறையக் கொடுத்து திரும்ப பெறமுடியாமல் போண்டியாகி தற்கொலை செய்தவர்களும் உண்டு. காரணம் இஸ்லாம் போதிக்கும் அணுகுமுறை இரு தரப்பிலும் இல்லையென்பதுதான் உண்மை.

நப (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  மரணத்திலேயே கெட்ட மரணம், கடனோடு மரணிப்பது தான்  என்றார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள், எவ்வளவு கடுமையான எச்சரிக்கை, எவ்வளவு கடுமையான எச்சரிக்கை, என்று மூன்று முறை கூறிவிட்டு நபி கூறினார்கள். ஒரு போராளி மார்க்கப் போரில் கலந்து ஷஹீதாகி, மறுபடியும் உயிர்பெற்று, மறுபடியும் ஷஹீதாகி, மறுபடியும் உயிர் பெற்று, மறுபடியும் ஷஹீதாகிப் போனாலும் அவர்மீது கடன் இருந்தால் அவர் சுவனம் செல்ல முடியாது, என்றார்கள்.

அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமைகள் அனந்தம் இருக்கிறது, அவைகளில் அடியார்கள் குறைவு ஏற்படுத்தினால் அல்லாஹ் அதை பெரிது படுத்துவதில்லை.  நபியவர்களிடம் ஆயிஷா (ரலி) ஒரு தாயின் பரிவு பற்றி பேசினார்கள். அவளுக்கு கொடுத்த பேரித்தம் பழத்தை தன் பிள்ளைகளக்கு சமமாக பிரித்துக் கொடுத்து விட்டு தான் சாப்பிடாமல் இருந்து விட்டாள். என்றார்கள். ஆம்! இறைவனும்  அடியார்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் கூடுதல் குறைவு ஏற்படுத்தினால் அல்லாஹ் அரை நொடி அளவு கூட பொறுப்படுத்தாமல் இருப்பதில்லை. தன் விஷயத்தில் பொறுமை காக்கும் தாய்போல, இறைவனும் அவன் விஷயத்தில் பொறுத்துக் கொள்கிறான். அடியர்களுக்கு மத்தியில் சமநீதியை எதிர்பார்க்கிறான்.

 குறிப்பாக, கடன் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் இஸ்லாம், திருப்பிச் செலுத்தும் விஷயத்திலும் அந்த கண்டிப்பை மறக்கவில்லை. தகப்பன் செத்தவுடன் சொத்தை   சூறையாடத் துடிக்கும் பிள்ளைகளுக்கும், செத்துவிட்டால் கடன் தொல்லையில்லை என்று தற்கொலை செய்து கொள்ளும் தகப்பனுக்கும் கீழ்வரும் சம்பவம் எவ்வளவு பெரிய எச்சரிக்கையை தருகிறது பாருங்கள்.

நபியவர்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து தொழவைக்க முற்படும்பொழுது வழக்கமாக கேட்கும் கேள்வியொன்றை கேட்டார்கள். இந்த மய்யித்தின் மீது கடன் ஏதும் இருக்கிறதா? என்றார்கள். ஆம் இரண்டு தீனார் கடன் இருக்கிறது என்று பதில் சொல்லப்பட்டது. இவரது கடனுக்கு யாரும் பொறுப்பேற்பவர் உண்டா என்றபோது கதாதா (ரலி) என்ற நபித்தோழர் அவரது கடனுக்கு பொறுப்பேற்றார். பிறகு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபியவர்கள் மறுநாளே கதாதாவிடம் சென்று அந்த இரண்டு தீனாரை கொடுத்துவிட்டீரா? என்றார்கள். நபியே! நேற்றுதானே   பொறுப்பெடுத்தேன்  அடைத்து விடுகிறேன் என்றார். எப்பொழுது கடனை அடைத்து விட்டேன் என்று சொன்னாரோ அப்பொழுது நபியவர்கள் கூறினார்கள். இப்பொழுதுதான் (அந்த மய்யித்தின்) உடல் குளிர்ந்தது என்றார்கள்.

عَنْ جَابِرٍ ، قَالَ : " مَاتَ رَجُلٌ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَعَلَيْهِ دَيْنٌ ؟ " ، قُلْنَا : نَعَمْ ، دِينَارَانِ ، فَقَالَ عَلَيْهِ السَّلامُ : " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " ، فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " حَقُّ الْغَرِيمِ عَلَيْكَ ، وَبَرِيءَ مِنْهُمَا الْمَيِّتُ ؟ " ، قَالَ : نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَصَلَّى عَلَيْهِ ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، قَالَ عَلَيْهِ السَّلامُ لِأَبِي قَتَادَةَ : " مَا فَعَلَ الدِّينَارَانِ ؟ " ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّمَا دَفَنَّاهُ أَمْسِ ، ثُمَّ أَتَاهُ بَعْدُ ، فَقَالَ لَهُ : " مَا فَعَلَ الدِّينَارَانِ ؟ " ، قَالَ : قَضَيْتُهُمَا يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : " الْآنَ بَرَّدْتَ عَلَيْهِ جِلْدَهُ ".

وَبِخَبَرَيْنِ آخَرَيْنِ لَا يَصِحَّانِ : أَحَدُهُمَا : " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ ".
அபூபக்கர் சித்திக் (ரலி) மிகச் சாதாரணமாக வாழ்ந்தவர்கள். தங்களின் பிரதான மந்திரியாக நபியால் நம்பிக்கைக்குரியவர் என்று அடையாளங் காட்டப்பட்ட மஃகப் துவைஸி பைத்துல்மால் பொறுப்புதாரியாகவும் இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) துவைஸியிடம், நான் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். இந்த நோயிலிருந்து நான் மீளுவேன் எனும் நம்பிக்கையில்லை. நான் ஏதேனும் உங்களிடம் கடன் பெற்றிருந்தால் சொல்லுங்கள். அதை அடைத்து விடுகிறேன். அல்லாஹ்வை கடனோடு சந்திக்க விரும்பவில்லை. என்று பலமுறை வற்புறுத்திய பிறகு வெறும் 25 திர்ஹம்தான் தரவேண்டும் என்றார்கள். உடனே அபூபக்கர் (ரலி) தன் மகள் ஆயிஷாவிடம் அந்தக் கடனை   அடைக்குமாறு பணித்தார்கள்.  حسنات البرار سئات المقربين எனும் வார்த்தைக்கேற்ப வல்லவனுக்கு (அல்லாஹ்) மட்டும் நல்லவர்களாய் வாழ்ந்த பெருமக்கள் வாழும்போதும், வாழ்ந்த பிறகும் படைத்தவனை பரிசுத்தமாக சந்திக்க நினைத்தார்கள்.

கடன் வாங்கும் தகுதியை மார்க்கம் மூன்று சந்தர்ப்பங்களில் அனுமதிக்கிறது.
1. கடன் வாங்குபவனுக்கு சொத்துகள் இருந்தால். சொத்தைவிற்றாவது கடனை அகை்க வேண்டும். பெரும்பாலும் இன்றைய சொத்துக்கள் அவர்கள் இருக்கும்போதே   ஜப்தியாகி விடுகிறது. இறந்த பிறகு பாவப்பட்ட வாரிசுகளுக்கு பரிசாகிவிடுகிறது. கடன் பட்டவர்களின் சொத்துக்களும் உடன்கட்டை ஏறிவிடுகின்றன.
2. வாரிசுகள் இருந்தால்,  தகப்பனின் கடனை அடைக்காமல் சொத்தைமட்டும் சொந்தம் கொண்டாட நினைப்பது வாரிசுகளுக்கு உரிமையில்லை.
3. لو اقسم علي الله لابره  எனும் வார்த்தைக்குச் சொந்தக்காரர்கள். ஆம் சஹாபிகள் தான்.
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, இது நடக்கும் என்றால் அதை அல்லாஹ் நடத்தி வைப்பான் அப்படிப்பட்ட இறையன்பு கொண்டவர்கள்.

زبير بن عوام  என்ற நபித் தோழர். அமானிதங்களைக் கூட கடனாக வாங்கி தர்மம் செய்பவர்கள்.
இவர் தனது கடைசி நேரத்தில் தன்மகன் عبد الله بن زبير ஐ அழைத்து சொன்னார்கள். என் மரணத்திற்குப் பிறகு மூன்றுவருடம் தொடர்ந்து மினாவிற்குச் சென்று என் தந்தைக்கு யாராவது கடன் கொடுத்திருந்தால் அவர் என்னிடம் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்ய வேண்டும். யாராவது வந்து கேட்டால் காரணம் கேட்காமல் அவரது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். என்றார்கள். கடனை அடைக்கும் சக்தி இல்லையென்றால்  அல்லாஹ்விடம் اللهمرب الزبير واقضي دينه என்று துஆச் செய், என்றார்கள். மகனும் அறிவிப்புச் செய்தார். நீண்ட நாட்களுக்கப் பிறகு ஒருவர் வந்து  زبير بن عوام எனக்கு பத்து லட்சம் தரவேண்டும் என்றார். மகனுக்கு தலைகால் புரியவில்லை. அல்லாஹ்விடம் துஆச் செய்தார். பிறகு முஆவியா (ரலி) ஒருநாள்    عبد الله بن زبير  அவர்களிடம் வந்து உன்தகப்பனாரின் இடம் ஒன்று உள்ளது. அதை கிரயத்திற்கு எனக்கு  கொடு   என்றார்கள். பிறகு அந்த இடம் ஏலத்திற்கு விடப்பட்டது. உஸ்மான் (ரலி) 25லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்கள். இதனால் கடனும் அடைந்து கடன்பட்டவரும் பயன் அடைந்தார்.
http://www.saaid.net/rasael/322.htm ஆதாரத்திற்கு இந்த அட்ரஸில் பார்க்கவும்.
கடனில்லாமல் மரணிக்கும் பாக்கியத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் தருவானாக!



Wednesday 12 June 2013

இஸ்லாம் தியாகிகளால் வளர்ந்தது...!

             
இந்த உலகில் தோன்றி வளர்ந்த மதங்களில் இஸ்லாத்தின் வளர்ச்சி போன்று எந்த மதங்களும் இல்லை. காரணம் இஸ்லாம் இந்த உலகிற்கு போதித்த பண்புகளின் தாக்கம். இதை மாற்றாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றாலும், நமது முன்னோர்களின் ஷஹாதத்தும், தியாகமும் தான் இந்த மார்க்கத்தின் மைல்கல் என்பதை விளங்க வேண்டும். ஆம்!

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، " أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ " . قِيلَ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "
இந்த போருக்காக, இதனால் கிடைக்கும் பேருக்காக தங்களின் உயிரைத் துறந்த சஹாபிகளின் தியாகத்தால்  இந்த மார்க்கம் மலர்ந்து விரிந்தது.

சரித்திரம் 1. நபியின் காலம். பத்ரு யுத்தத்திற்கான அறிவிப்பு நபியவர்களிடமிருந்து வந்த போது  خيثمة என்ற சஹாபி தன் மகன் سعد என்பவரிடம் கூறினார், மகனே! வாழும் காலம் உனக்கு இருக்கிறது. நான் உன் தகப்பன், எனவே என் சொல்லை மீறாதே,  யுத்தத்தில் நான் கலந்து கொள்கிறேன். நீ வீட்டில் இரு என்றார். மகன் அதற்கு ஒத்து வரவில்லை. தந்தையே! உலக ஆதாயம் என்றால் பரவாயில்லை, இது மறுமை பேறுக்கான வாய்ப்பு. இதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். கடைசியாக வழக்கு நபியிடம் கொண்டு செல்லப் பட்டு  போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மகனே பெற்று ஷஹீதானார்.
 قال خيثمة بن الحارث لابنه سعد إنه لا بد لأحدنا من أن يقيم فآثرني بالخروج وأقم مع نسائك فأبى سعد وقال لو كان غير الجنة آثرتك به إني أرجو الشهادة في وجهي هذا، فاستهما فخرج سهم سعد فخرج مع رسول الله إلى غزوة بدر فاستشهد يومئذ قتله عمرو بن عبد ود
யார் இவர்கள்? பரம்பரை முஸ்லிம்களா? ! தன்னை எதிர்த்துப் பேசியவனின் குடும்பத்தைக் கூட கூண்டோடு ஒழித்த கூட்டம். இன்று ஷஹாதத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
 இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும்  தான் இஸ்லாம் வளர்ந்தது.

சரித்திரம் 2. உஹத் யுத்தம்:  நபியவர்கள்  زيد بن ثابت அவர்களை அழைத்து யுத்த களத்தில் சஃது இப்னு ரபீஃ இருந்தால் என் ஸலாமைச் சொல்லி அவரின் நிலையை விசாரித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். வந்தவர் சஃதைப் பார்த்து நபியின் ஸலாத்தை சொல்லி தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றார். அதற்கு சஃது (ரலி) "சொர்க்கத்தின் நறுமணத்தை நுகருகிறேன்" என்று சொல்லி விட்டு  என் சமூகத்து அன்சாரிகளிடம் சொல்லுங்கள். உங்கள் கண்களில் மட்டும் உயிர் இருக்கும் கடைசி நேரமானாலும் நபிக்கு பாதுகாப்புக் கொடுக்காமல் ஏதாவது காரணம் சொன்னால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற செய்தியை என் சமூகத்தாரிடம் சொல்லுங்கள். என்ற செய்தியோடு இவ்வுலகைப் பிரிவார்கள் சஃது அவர்கள்.
عن زيد بن ثابت –رضي الله عنه – قال: "بعثني رسول الله –صلى الله عليه وسلم- يوم (أُحُد) لطلب سعد بن الربيع –رضي الله عنه وأرضاه- في القتلى، وقال لي: إن رأيته فأقرِئْه مني السلام، وقل له: يقول رسول الله -صلى الله عليه وسلم-: أخبرني كيف تجده؟ قال زيد: فجعلت أبحث عنه في القتلى، فأصبته وهو في آخر رمق، به سبعون ضربة؛ ما بين طعنة رمح، وضربة سيف، ورمية سهم، فقلت له: يا سعد إن الله يقرئك السلام، ويقول: أخبرني كيف تجده؟ قال: وعلى رسول الله -صلى الله عليه وسلم- السلام وعليك السلام، قل له: إني -والله- لأجد رائحة الجنة" ليس هذا موضع الشاهد، ولكن اسمع ماذا قال؟ "وقل لقومي الأنصار: لا عذر لكم عند الله أن يُخلص إلى رسول الله -صلى الله عليه وسلم- وفيكم عين تطرف" ثم فاضت روحه -رحمه الله-
 இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும்  தான் இஸ்லாம் வளர்ந்தது.  .  

சரித்திரம் 3. காதிஸிய்யா யுத்தம்: ஒன்னரை லட்சம் வீரர்களோடு எதிரிப்படை பாளையம் இறங்கியிருக்கிறது. உமர் {ரலி} அவர்கள் இஸ்லாமியப் படையின் தளபதியாக  مقرن رض
என்பவரை நியமனம் செய்து தைரியமும் சொல்லி அனுப்பினார்கள். இஸ்லாமியப் படை முன்னேறிச் சென்றது. எதிரிகள் தந்திரமொன்று செய்தார்கள். குதிரைகளின் கால் குழம்பைக் காயப்படுத்தும் ராட்சத ஆணிகளை  மண்ணுக்கடியில் புதைத்து  வைத்திருந்தார்கள். அதனால் இஸ்லாமியப் படைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இஸ்லாமியப் படைத்தளபதி   مقرن  ஒரு தந்திரம் செய்தார். போர் நிறுத்தத்திற்கு  அடையாளமாக மூட்டப்படும் நெருப்பை மூட்டினார்கள். பிறகு தன் வீரர்களுக்கு சொன்னார்கள். எதிரிகள் நாம் பயந்து விட்டதாக எண்ணுவார்கள். அப்பொழுது மூன்று தக்பீர் சொல்லப் படும். தக்பீருக்குப் பிறகு உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும் என்றார்கள். திட்டமிட்டபடியே யுத்தம் நடைபெற்றது. வெற்றியும் கிடைத்தது, அந்த வெற்றிக்குப் பின்னால்  مقرن  அவர்களின் உயிரும் பிரிந்திருந்தது.
எதிரிப் படைத்தளபதி طليحة  நாம் ஏன் தோற்றுப் போனோம், என்று ஆராய்ந்தார். ஒற்றன் ஒருவன் இப்படிச் சொன்னான்,
فلما رأى طليحة كثرة انهزام اصحابه قال ويلكم ما يهزمكم قال رجل منهم وانا احدثك ما يهزمنا انه ليس منا رجل الا وهو يحب ان يموت صاحبه قبله وانا لنلقى قوما كلهم يحب ان يموت قبل صاحبه  இஸ்லாமியப் படைவீரர்கள், தன் சகோதரனுக்கு முன்னால் தான் இறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், நம் படைவீரர்களோ தனக்கு முன்னால் தன் சகோதரன் இறக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள். இதுதான் நமது தோல்விக்கும், அவர்களின் வெற்றிக்கும் காரணம் என்றான்.
 இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும்  தான் இஸ்லாம் வளர்ந்தது. 

சரித்திரம் 3. பனூ ஹனீப்ஃ எனும் கோத்திரத்தார். நபியிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வந்திருந்தனர். தங்களது வாகனங்களின் பாதுகாப்பதற்காக முஸைலமா என்பவனை நியமணம் செய்தனர். ஊர் திரும்புகையில் இந்த முஸைலமா கூறினான். நான்தான் நபி, என்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான், மக்களும் அவனை ஏற்றுக் கொண்டனர். பிறகு நபிக்கு ஒரு கடிதம் எழுதினான்.
وقد كان مسيلمة بن حبيب ، قد كتب إلى رسول الله صلى الله عليه وسلم : من مسيلمة رسول الله ، إلى محمد رسول الله : سلام عليك ؛ أما بعد ، فإني قد أشركت في الأمر معك ، وإن لنا نصف الأرض ، ولقريش نصف الأرض ، ولكن قريشا قوم يعتدون . فقدم عليه رسولان له بهذا الكتاب . قال ابن إسحاق : فحدثني شيخ من أشجع ، عن سلمة بن نعيم بن مسعود الأشجعي ، عن أبيه نعيم ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لهما حين قرأ كتابه : فما تقولان أنتما ؟ قالا : نقول كما قال ، فقال : أما والله لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما . ] .
அந்த கடிதத்தில் பூமியை இரண்டாக பிரித்து பாதி (உமக்கு) குரைஷிகளுக்கு மீதி எனக்கு. என்று எழுதி இரண்டு நபர்களிடம் கொடுத்து அனுப்பினான். நபியவர்கள் படித்து விட்டு "தூதுவர்களை கொலை   செய்யக்கூடாது என்ற மரபு மட்டும் இல்லையென்றால் உங்கள் இருவரின் தலையையும் கொய்திருப்பேன்" என்றார்கள். பிறகு நபி   ثم كتب إلى مسيلمة : بسم الله الرحمن الرحيم ، من محمد رسول الله ، إلى مسيلمة الكذاب : السلام على من اتبع الهدى . أما بعد ، فإن الأرض لله يورثها من يشاء من عباده ، والعاقبة للمتقين [ ص: 601 பூமி இறைவனுக்குச் சொந்தம். இதை பங்குபோடும் உரிமை எவருக்குமில்லை என்றெழுதி حبيب بن زيد என்பவரிடம் கொடுத்தனுப்பினார்கள். படித்து பார்த்த முஸைலமா حبيب بن زيد அவர்களை கைது செய்ய உத்தரவிட்டான். என்னை நபியாக  ஏற்றுக் கொள்கிறாயா? என்று பலமுறை கேட்டான், حبيب بن زيد அவர்கள்  துளியளவும் அவனைப் பிரியப்படவில்லை. கோபமடைந்த முஸைலமா حبيب بن زيد அவர்களை ஒவ்வொரு உறுப்பாக வெட்டி வெட்டி கொலை செய்தான்.
 இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும்  தான் இஸ்லாம் வளர்ந்தது. 
மாநபியை விமர்ச்சித்ததற்காக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து பிரமாண்ட கூட்டத்தை கூட்டியதால் ஏதோ இஸ்லாத்திற்கு பெரும் பேரை தேடிக் கொடு்த்து விட்டோம் என்றோ, வருடத்திற்கொருமுறை மீலாது விழாக்கள் நடத்துவதாலோ, நம்முடைய முயற்சியில்தான் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்றோ யாரேனும் மனப்பால் குடித்தால் அது மடத்தனமானது. இஸ்லாம் தியாகிகளால் வளர்ந்தது..! 


Monday 3 June 2013

மிஃராஜ், ஐயமும்- தெளிவும்

                            

மாநபியின் மிஃராஜ் பல ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த அற்புத பயணம்.
1,24,000 நபிமார்களில் நமது நபிக்கு மட்டும் கிடைத்த அருமையான பயணம்.
உலக விஞ்ஞானிகள் கூட முட்டாள்த்தனமாக யோசித்து மாட்டிக்கொண்ட ஆச்சர்யமான பயணம்.
மெஞ்ஞானிகள் கூட தன்மானம் இழந்த தரமான பயணம்.
அரபுலகமே அதிர்ந்து போன அதிசய பயணம்.
பல்வேறு நபிமார்களுக்கு பலவிதமான முஃஜிஸாக்களை தந்த இறைவன் யாருக்கும் மிஃராஜ் எனும் முஃஜிஸாவைத் தரவில்லை.


II. நபி (ஸல்) அவர்களின் முஃஜிஸாக்களில் சில:

விரல் நுனியிலிருந்து தண்ணீர் வந்தது முஃஜிஸா.

நபியின் பரக்கத்தான கரம்பட்டதும் ஆட்டின் மடுவில் தானே பால் வந்தது முஃஜிஸா.

வெட்டுக் காயம்கூட பட்டுப்போகும் பெருமானாரின் எச்சில் ஒரு முஃஜிஸா.

சந்திரனைப் பிளந்தது முஃஜிஸா.

மரம் வேரோடு நடந்தது முஃஜிஸா.

இவ்வளவு முஃஜிஸாக்கள் இருந்தாலும் இதில் மிஃராஜ் போன்ற ஒரு முஃஜிஸா நபியின் வாழ்வில் வேறொன்றில்லை.


III. நபியின் மிஃராஜ் ஐயமும், தெளிவும்:
நபி {ஸல்} விண்ணுலகப் பயணத்தை தன் பூதஉடலோடு மேற்கொண்டார்களா? வெறும் உயிர் மட்டும் போய் வந்ததா?                    
                                                 
          1.     سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِنَ المَسْجِدِ الحَرَام    
  இதிலுள்ள   عبد என்ற வார்த்தை  உடலும் உயிருமுள்ள மனிதனுக்கு தான் சொல்லப் படும். 
       2. واوحينا الى موسي ان اسر بعبادي انكم متبعون   என் அடியார்களை அழைத்துக் கொண்டு, என்று மூஸாவிற்கு அல்லாஹ் இட்ட கட்டளையும் உடலும் உயிருமுள்ள மனிதர்களுக்குத் தானே!
       3.     وانه لما قام عبد الله  இதன் உள்ளர்த்தமும் தெளிவானது தானே! 
       4.  اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله   நமது ஈமானும் கூட நபியின்  ரூஹின் மீது மட்டும் அல்லவே!
எனவே நபியின் விண்ணுலகப் பயணம் என்பது உடலோடு நடந்தது தான் என்பது தான் சத்தியம்.

IV.  அல்லாஹ்விற்கு இருப்பது போன்றே திருநாமங்கள்  நபியவர்களுக்கும் இருக்க 
عبد, அடிமை என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?
       1. லட்சத்தி இருபத்தி நான்காயிரம் நபிமார்களில் எவருக்கும் கிடைக்காத பெரும்பாக்கியம் எம்பெருமானாருக்கு கிடைத்ததால் அவரும் இன்னொரு இறைவனோ என்ற சிந்தனைகூட எவரின் உள்ளத்திலும் உதித்து விடக்கூடாது என்பதற்காகவே அடிமை என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தினான்.
       2. அதுமட்டுமல்ல, மிஃராஜின் போது அல்லாஹ் நபியிடம் உமக்க பிடித்த பெயரும் குணமும் என்ன என்று கேட்டபோது عبديةஎன்றார்கள்       خطبات منور
  இறைவன் நபிக்குப் பிடித்த பெயரையே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.


V.  பிறகு ஜிப்ரயீல், உம்முஹானியின் வீட்டிற்கு வழக்கத்திற்கு மாறாக நபியை படுக்கையில் வைத்து சந்தித்து ஹத்தீமுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சுந்தர நபியின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டது. இதை வைத்து நபிக்கு கொடுக்கப்பட்ட கவ்ஸர் எனும் தடாகத்தைவிட ஜம்ஜம் தான் சிறந்தது என்பதை மார்க்க வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள். 
மேலும் நபியின் இதயத்தை கழுவ வேண்டியதன் அவசியம் என்ன?  
நீண்ட பயணங்களை மேற்கொள்பவர்கள் கூட தாங்கள் சேரவேண்டிய இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு ஊசி, மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்வது வழக்கம்தானே. அதே போன்றுதான், நபியவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு தகுந்தார்போன்று உள்ளம் சுத்தப்படுத்தப்பட்டு ஞானத்தையும், அறிவையும் கொண்டு மருத்துவம் பார்க்கப் பட்டது.

VI.  புராக் ஓர் அற்புதம், ஜிப்ரயீல் ஒரு Tourist guide:
பிறகு மிஃராஜ் செல்வதற்காக புராக்கில் ஏறி பயணமானார்கள் நபியவர்கள், பயணத்தின் ஊடே ஜிப்ரயீல், மரங்கள் நிறைந்த பகுதியைக் காண்பித்து இங்கு தான் நீங்கள் ஹிஜ்ரத் செய்வீர்கள் என்றார்கள்.
பிறகு தூர்சீனா மலைப்பகுதியைக்காண்பித்து இங்கு தான் மூஸா நபி  அல்லாஹ்வோடு 
உரையாடினார்கள், என்றார் ஜிப்ரயீல்.
பிறகு بيت اللحم எனும் இடத்தைக் காண்பித்து இங்கு தான் ஈஸா நபி பிறந்தார்கள் என்றார் ஜிப்ரயீல். நபியவர்கள் அங்கு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
இங்கிருந்து தான் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் புறப்பட்டார்கள்.  பைத்துல் முகத்தஸ் சென்றதும் இதுவரை நபிமார்கள் எந்த கல்லில் தங்களது வாகனங்களை   கட்டி
 வைத்தார்களோ அதே கல்லில் புராக்கும் கட்டி வைக்கப்பட்டது. நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் நுழைந்தார்கள், ஜிப்ரயீல் பாங்கு சொன்னார்கள். 

VII.  பைத்துல் முகத்தஸ்:
அங்கே எல்லா நபிமார்களும் இருக்க தொழவைக்கும் பொறுப்பை யார் நிறைவேற்றுவது!? ஆதம் இருக்கிறார், இரண்டாம் ஆதம் நூஹ் இருக்கிறார், இப்ராஹீம் கலீலுல்லாஹ், மூஸா கலீமுல்லாஹ், ஈஸா ரூஹீல்லாஹ் இருக்கிறார். ஜிப்ரயீல் அல்லாஹ்விடம் கேட்டார். அல்லாஹ் கூறினான். யாரின் ஆன்மாவிற்கு கனம் அதிகமோ அவரை தொழ வைக்கச் சொல்லும் என்றான். நபி {ஸல்} தொழவைத்தார்கள். 

VIII.  மிஃராஜிற்காக பைத்துல் முகத்தஸ் வரவேண்டியதன் அவசியம்?
         1. مولنا احمد الله رح அவர்கள் கூறுகிறார்கள்: பூமியின் உயரமான பகுதி இது. இன்னும் சொல்வதானால் வானுக்கு இறைவன் ஏற்படுத்திய விமான நிலையம் இந்த பைத்துல் முகத்தஸ்.
          2. باركنا حوله அபிவிருத்திகள் நிறைந்த பசுமையான இடம்.
          3. பல நபிமார்கள் வாழ்ந்து மறைந்து அடக்கமான இடம்.
          4. அல்லாஹ் கூறினான்: அர்ஷிலிருந்து நைல், ஃபுராத் நதிகள் வரையுள்ள இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள். இந்த இடத்திற்கு எனக்குப் பிடித்தமானவர்களை நான் அனுப்புவேன் என்றான். அதன் அடிப்படையிலும் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.                               خطبات منور                     

ஆக நபியின் மிஃராஜ் பயணம் சம்பந்தமாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையில்லாதது. இறைவன் விளங்கும் ஆற்றலைத் தருவானாக!