Thursday 29 January 2015

நன்றி மறப்பது நன்றன்று........!













Man gets and forgets  God gives and forgives
பெறுவதும், மறப்பதும் மனித குணம்,
தருவதும், மன்னிப்பதும் இறைவனின் குணம்.


 காலில் அணியும் செருப்பு முதல் தலையில் அணியும் தொப்பி வரை.
வீடு, வியாபாரம், வாகனம் இப்படி எல்லாவற்றிலும் நல்லதை, தரமானதை மனிதன் விரும்புகிறான்.

அல்லாஹ், காரணங்களுக்கு அப்பாற்பட்டவன். உலகில், நல்லவர்கள் என்று போற்றப்பட்டவர்களை அசிங்கப் படுத்தியும், இவர்கள் மாதிரி மோசமானவர்கள் யாருமில்லை என்றவர்களை தரத்தால் உயர்த்தியும் காட்டுகிறான்.

கடைவீதிக்கு வந்த காத்தமுன் நபி, தன் தோழர் ஒருவரை இறுகப் பிடித்துக் கொண்டு இவருக்கு யாரேனும் விலை தருவீர்களா! என்றபோது, அந்தத் தோழர், நாயகமே! என்னைப்போய் யாராவது விலை பேசுவார்களா? நான் என்ன விலைக்குப் போவேன் என்றார். இங்கு வேண்டுமானால் உனக்கு விலை இல்லாமல் போகலாம். அல்லாஹ்விடம் உனது தகுதி உயர்ந்தது என்றார்கள் நபியவர்கள்.

அபுல்ஹிகம் என்றழைக்கப் பட்டவன்தானே அபுஜஹ்லாக மாறினான். 
உம்மியாகப் பிறந்த நபிதானே உலகுக்கு அறிவொளி தந்தார்கள்.
கண்தெரியாதவர்தானே என்ற நினைவிற்குத்தானே عبس وتولى என்ற அத்தியாயம் இறக்கப் பட்டது.

என்நாவில் முடிச்சிருக்கிறது பேசினால் சரியாக விளங்காது.
 وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي * يَفْقَهُوا قَوْلِي 
என்னைவிட என் சகோதரர் ஹாரூன் நன்றாகப் பேசுவார்.
 وَأَخِيْ هَارُوْنُ هُوَ أَفْصَحُ مِنِّيْ لِسَانًا
  என்று மூஸா சொல்லியும் . அல்லாஹ், மூசாவைத்தானே நபியாக தேர்ந்தெடுத்தான்.

லைலாவை அழைத்து, அப்போதைய அரசர் கேட்டாராம். உன்னைப்போய் எப்படி மஜ்னூன் காதலித்தான் என்று. அதற்கு லைலா சொன்னாள், அரசே! உங்களிடம் மஜ்நூனின் கண்ணில்லையே.
எனவே! நம்முடைய வணக்கங்கள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டுமெனில் அவற்றிக்கு வர்ணம் பூச வேண்டும்.

முதல் பூச்சு: அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல்:

உணவு. இது இல்லையென்றால் பட்டினி.
 நீர். இது இல்லையென்றால் தாகம்.
உடை . இது இல்லையென்றால் நிர்வாணம். இவ்வளவுதானா இறைவன் கொடுத்தது. இல்லை, இல்லவே இல்லை. இதோ என் மடியில் கிடக்கும் என் மனைவி, அவள் மடியில் புரளும் என் பிள்ளைகள். என்னை ஈன்ற என் பெற்றோர், அவர்கள் ஊட்டும் உணவு, காட்டும் பாசம். என் உயிரான உறவுகள். என் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரம். என் முடிமுதல் அடிவரை. அத்தனையும் அவன் அருள்தானே! நான் நன்றிக்கடன் பட்டவனல்லவா! மனிதன் செய்யும் உபகாரத்திற்கே நான் நன்றி காட்டும் பொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்மீது கடமையல்லவா!
என் அடியார்களில் குறைவானவர்களே எனக்கு நன்றி செலுத்துகிறார்கள். இதில் நான் எதில் கட்டுப்பட்டவன். و قليل من عبادي الشكور
உன் அடியார்களில் அதிகம்பேர் நன்றி மறந்தவர்களே! ولا تجد أكثرهم شاكرون
இந்த சாத்தானியக் கூற்றுக்கு நான் சொந்தமாகிவிடக் கூடாதே! ஆம்! நான் நன்றி செலுத்த வேண்டும்.

நன்றி மறவாதீர்:  
63 வருட காலத்தில் உலகெலாம் ஒளிவெள்ளமாக்கிய உத்தமத்தூதர், தாஜூல் மதினா (ஸல்) அவர்கள், தன் தோழர்களிடம், என் நண்பர்களே! நீங்கள் எனக்கு செய்த உபகாரத்திற்கெல்லாம் ஏதோ ஒருவகையில் நான் பிரதி உபகாரம் செய்துவிட்டேன். ஆனால், மக்களெல்லாம் என்னை புறக்கணித்தபோது, என்னை ஏற்றுக்கொண்டு, மகளை திருமணம் முடித்துக் கொடுத்து, மதினா பயணத்தில் கூட்டாளியாக இருந்து, இன்னும் எவ்வளவோ எனக்காக செய்த அபூபக்கருக்கு மட்டும், நான் கியாமத்தில்தான்  பிரதி உபகாரம் செய்யமுடியும் என்றார்கள். இந்த வாக்குறுதியே அபூபக்கருக்கு செய்த பிரதி உபகாரம் தானே!

நன்றி மறவாதீர்: சக்ராத்தில் உமர் அவர்கள், தன்மகன் அப்துலாஹ்வை ஆயிஷாவிடம் அனுப்பி, நபிக்குப் பக்கத்தில் அடக்கம் பெற என்தந்தைக்கு அனுமதி தாருங்கள் என்றபோது,  ஆயிஷா அனுமதி கொடுத்தார்கள். ஏன் தெரியுமா!? إفك  உடைய விஷயமாக நபியவர்கள், பலரிடமும் ஆலோசனை செய்தபோது உமர் அவர்கள், நபியே! பரிசுத்தமான தங்களுக்கு பாவம் செய்யும் பெண்ணையா அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான், இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றார்கள். இந்த வார்த்தையை உள்ளத்தில் நிறுத்திய ஆயிஷா, இன்று பிரதி உபகாரமாய் இல்லத்திலும் இடம் கொடுக்க சம்மதித்தார்கள். கடன்பட்டு மட்டுமல்ல, நன்றிக்கடனுக்குக் கூட பிரதி செய்வதில் சஹாபியர்களுக்கு அலாதியான ஆர்வமிருந்தது.
நன்றி மறந்தால்:  
من لم يشكر النعم فقد تعرض لزولها ، ومن شكرها فقد قيدها بعقالها                                   

இரண்டாம் பூச்சு: துன்பத்தில் பொறுமை.

சின்ன சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் உயிர் துறந்து விடுகிறார்கள்.
காதலித்த பெண் கிடைக்க வில்லையென்றால், வியாபாரத்தில் நஷ்டமென்றால், வட்டிக் கடன் என்றால் உடனே சாவுதான் தீர்வென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.
இணையத்தில் படித்த ஒரு செய்தி. கத்தி, விஷம், கயிறு, இவைகளை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் மலை உச்சிக்குப் போகிறான். எப்படி சாவதென்று யோசிக்கிறான். சாவதற்கு இவ்வளவு யோசித்த நீங்கள், வாழ்வதற்கு ஒரு வழிகூட யோசிக்க வில்லையே என்று மனைவி கேட்டாளாம்.
துன்பத்தின் போது என்ன செய்ய வேண்டும்.
முன்னோர்களை நினைவு கூறுதல். عبدالله بن مسعود  அவர்கள் கூறுகிறார்கள். ஹுனைன் யுத்தம் முடிந்து கனீமத் பொருட்களின் பங்கீடு நடந்தது. அப்போது, சிலருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஓரிரண்டு நபருக்கு நூறு ஒட்டகம் வரை வழங்கப்பட்டது. இதைப் பார்த்த வாலிபர் ஒருவர், இந்த பங்கீடு நியாயமாக இல்லை. என்றார். இந்த செய்தி நபியவர்களுக்கு தெரிய வந்தபோது அல்லாஹ்வும், ரசூலையும் தவிர வேறுயார்தான் நீதமாக நடக்க முடியும்.!?  மூஸாவின் சமுதாயம், அவரை ரொம்பவே  சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறார்கள். அவரும் பொறுமையாக இருந்தார். அல்லாஹ் மூஸாவிற்கு அருள்புரிய வேண்டும். என்றார்கள். ஆக துன்பத்தின்போது முன்னோர்களை நினைவில் கொள்ள வேண்டும்.

துன்பத்தின்போது அல்லாஹ்வின் உதவியை நம்ப வேண்டும்:

நஜ்து தேசம் சென்று திரும்புகையில் ஒரு மரத்தடியில் நபி இளைப்பாறிய சமயம், நபியின் வாளை எடுத்துக் கொண்டு உன்னை இப்போது காப்பாற்றுபவர் யார்? என்றதும் நபி, அல்லாஹ் என்றார்கள். உடனே அவரது கையிலிருந்த வாள் கீழே விழ நபி எடுத்துக் கொண்டு இப்போது உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்றார்கள். ஆக துன்பத்தில் அல்லாஹ்வின் உதவி உண்டு என்பதை நம்பவேண்டும்.

துன்பத்திற்கு நற்கூலி உண்டு என்பதை நம்பவேண்டும்:
ஒரு முஃமினின் காலில் குத்தும் முள்ளிற்கும் நன்மை உண்டல்லவா!
عبدالله بن مسعود அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முஃமினுக்கு காய்ச்சல் வந்தால் கூட மரத்திலிருந்து இலைகள் உதிர்வதுபோல அவனது பாவங்கள் உதிர்கின்றன என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

துன்பத்தில் பொறுமை வேண்டும்:
ஒருநாள் ஃபாத்திமா (ரலி), கணவர் அலி, பிள்ளைகள் ஹசன் ஹுசைன் இவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு தந்தையின் நினைவு வரவே நபிக்கும் ரொட்டி எடுத்துக் கொண்டு போய் கொடுத்தபொழுது மாநபி சொன்னார்கள், மூன்று நாளைக்குப் பிறகு என்வயிற்றுக்குள் செல்லும் முதல் உணவு து என்றார்கள். ஆக துன்பத்தின் போது பொறுமை காக்க வேண்டும். அல்லாஹ்  அருள்புரிவானாக!