Thursday 10 April 2014

மழை வேண்டும் ரஹ்மானே!

சமீப காலமாக தமிழகத்தில் பரவலாக மழை இல்லை. அதை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாநகர ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஞாயிற்றுக் கிழமை(13-04-14) மழைத்தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு இந்த தலைப்பு. 

மனிதனின் செயல்பாடுகளால் சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் ஆயிரம் காரணங்களை கூறினாலும், சூழ்நிலை மாற்றங்களுக்கும், இயற்கை சீற்றங்களுக்கும் மனிதன்தான் காரணம் என்று வான்மறை மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
ظهر الفساد في البر و البحر بما كسبت ايدي الناس                                                 
சுனாமிக்கும், சூறாவளிக்கும், பூகம்பத்திற்கும், புதைகுழிக்கும், உஷ்ணத்திற்கும், உரைகுளிருக்கும் கால மாற்றங்களை மட்டும் காரணம் காட்டி நாம் ஒதுங்கிவிட முடியாது. வான்மழை பொய்த்ததற்கும் நாம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
இசையால் மழையை வரவழைக்க முடியும் என்பதும், மரம் வளர்த்தால் மழை வரும் என்பதும், யாகம் வளர்த்தால் மழை வரும் என்பதும், தவளைக்கும், தவளைக்கும் கல்யாணம் செய்துவைத்தால் மழை வரும் என்பதும், கழுதைக்கும், மரத்திற்கும் திருமணம் முடித்து வைத்து மழையை எதிர்பார்ப்பதும் மூடநம்பிக்கைதானே தவிர! மழையை வரவழைக்க முடியாது. காரணம், மழைக்குப் பொறுப்புதாரி மனிதன் இல்லை. இதோ இறைவனின் கர்வம் பாருங்கள்.
وأنزلنا من السماء ماءا فاخرجنا به من الثمرات رزقالكم                              
اللَّهُ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَيَبْسُطُهُ فِي السَّمَاءِ كَيْفَ يَشَاءُ وَيَجْعَلُهُ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ ۖ فَإِذَا أَصَابَ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
வான்மழை பொய்த்ததற்கும் நாம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
  :الكبرياء في ألارض  மனிதன் தன் பொருள், கௌரவம், பதவி, செல்வநிலை இவைகளை வைத்து பெருமையடிக்கும்போது பெருமைக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் கோபப்படுகிறான். முன்னோர்களின் வாழ்கையை இப்படி விவரிக்கிறான்.
وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِنْ قَبْلِكَ فَأَخَذْنَاهُمْ بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ  فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَٰكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُون   (6:42,43)
நபியவர்கள், மழைத் தொழுகைக்காக செல்லும்போது, பணிந்தவர்களாக, பயந்தவர்களாக, சாதாரண நிலையில் செல்வார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்படியானால், அல்லாஹ்வின் விஷயத்தில் துணிவு கொள்வது அவனின் ‘’அதாபையும்’’, பணிவு கொள்வது அவனின் ‘’ரஹ்மத்தையும்’’ கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்துகிறது.

:المشى بين الناس بالفساد ஏமாற்றுதல், மோசடி, திருட்டு, லஞ்சம் இவைகளாலும் மழை தடைபடும். குறிப்பாக, அளவைகளில், நிறுவைகளில் மோசடி செய்வது, மக்களின் உரிமைகளின் வஷயத்தில் வரம்புமீருவது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ فَقَالَ: (يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ) [رواه ابن ماجة 

இந்த அதாபை அல்லாஹ் பிரஅவ்னின் சமூகத்தாருக்கு ஏற்படுத்தினான்.
நபியவர்கள் கூட, குறைஷிகள் நபியை பொய்படுத்தியபோது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்தபோது, இறைவா! யூஸுப் நபிக்கு கொடுத்த ஏழு வருட பஞ்சத்தை இவர்களுக்கும் கொடு’’ என்று கேட்டார்கள். விளைவு: பசியின் கொடுமையால் பிராணிகளின் எலும்பையும், செத்த பிராணிகளையும் சாப்பிட்டார்கள்.
மோசடியும், சூழ்ச்சியும் பஞ்சத்தையும் பசிக்கொடுமையையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்தக் கொடுமை நல்லோர்களையும் பாதிக்குமா?
நபியவர்களின் மனைவி ஜைனப் ரலி கேட்டார்கள்: எங்களில் நல்லவர்கள் இருக்க நாங்கள் பீடிக்கப் படுவோமா!? என்றபோது ஆம்! பாவங்கள் மிகைத்துவிட்டால். என்றார்கள் நபியவர்கள்.
  :منع إخراج الزكاة தேடிப்போய்க் கேட்டாலே ஜகாத்தைத் தர மறுக்கிறாகள். மார்க்கம், ஏழைகளை தேடிப்போய் கொடுக்கும் பழக்கம் இல்லாதபோது மழை தடைபடும் என்கிறது, ஏழைகளின் உரிமைகள் பாழ்படுத்தப் படும்போது மழை தடைபடும். அன்பளிப்புகளை கொடுத்துவிட்டு அதையும் ஜக்காத்தில் கழிக்கிற மனிதர்கள் வாழும்வரை மழை எங்கே வரப் போகிறது             .والذين في اموالهم حق للسائل والمحروم
 "والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم، يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ماكنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون  

யஹ்யப்னு முஆத் (ரஹ்) கூறுகிறார்கள்: மனிதன் மரணிக்கும்பொழுது இதற்குமுன் சந்தித்திராத இரண்டு சோதனைகளை சந்திக்கிறான்.
1. அவன் சேர்த்துவைத்த பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டுப் போகிறான்.
2. சேர்த்த பொருளை விட்டுவிட்டுப் போனாலும், அத்தனைக்கும் அவன் அல்லாஹ்விடம் கணக்கு சொல்லவேண்டி இருக்கிறது.
எனவே, நமது செல்வங்கள் ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் வழி செய்யவேண்டும்.
அபூஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிற ஹதீஸ்:
ஒரு மனிதரின் தோட்டத்தைக் குறித்து அங்கு மழை பொழியவேண்டும் என்று அசரீரி கேட்டது. எங்கும் பெய்யாத மழை அவரின் தோட்டத்தில் மட்டும் மழை பொழிந்தது. காரணம் கேட்டபோது அந்த மனிதர் கூறினார். என் தோட்டத்தின் விளைச்சலில் மூன்றில் ஒரு பகுதியை நான் சதகா செய்கிறேன், மூன்றில் ஒன்றை நானும் என்குடும்பத்தாரும் சாப்பிடுகிறோம், மிச்சத்தை என் நிலத்திலேயே மறுபடியும் பயிரிடுகிறேன் என்றார்.
செய்யும் தர்மம் பெய்யென பெய்யும் மழை. எப்படி பொருந்துகிறது பாருங்கள். பதுக்கி வைத்தல்,பாவத்தையும், ஏழைகளுக்கென ஒதுக்கிவைத்தல் லாபத்தையும் தரும் என்பது விளங்குகிறதா!
 كثرة المعاص: மழை தடைபட முக்கிய காரணம் இதுதான். பாவங்களின் பெருக்கம். பாவங்கள், அல்லாஹ்வின் கோபங்களை இழுத்து வரும். நன்மைகள் அல்லாஹ்வின் நன்மைகளை இழுத்து வரும்.
உமரிப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். சிலர் செய்யும் பாவத்திற்காக அல்லாஹ் எல்லோரையும் தண்டிப்பதில்லை. ஆனால் பாவங்கள் பகிரங்கமானால், அப்போது எல்லோரையும் அல்லாஹ்வின் தண்டனைப் பிடிக்கும் என்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; பாவம் செய்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் பாவம் அல்லாஹ்வின் கோபத்தை கொண்டு வரும். அல்லாஹ்வின் கோபம் மழையை தடுக்கும் என்றார்கள்.
           إياك والمعصية ،فان المعصية حل سخطالله،ومن سخط الله حبس المطر
பாவம்; பாவம் பறவைகளையும் விட்டு வைப்பதில்லை.
அநியாயக்காரன், அவனுக்கு மட்டும்தானே அநியாயம் செய்கிறான். என்று ஒரு மனிதர் கேட்டபோது, அபூஹுரைராஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள், நீங்கள் சொல்வது போன்றில்லை. ஒரு மனிதன் செய்யும் தீமையால், பறவைகள் அதன் கூட்டுக்குள்ளேயே செத்துவிடுகிறது.

முஜாஹித்(ரஹ்) கூறுகிறார்கள்;
إن البهائم تلعن عصاة بني آدم
பஞ்சம் ஏற்பட்டால், மழை தடைபட்டால், இதுவெல்லாம் ஆதமின் பிச்சளங்கள் செய்யும் பாவத்தின் விளைவு என்று விலங்கினங்களும் சபிக்கிறது.
இக்ரிமா(ரஹ்) கூருகிறார்கள்; பூமியில் வாழும் தேள், நட்டுவாக்கிளி போன்ற விஷஜந்துக்கள், ஆதமின் பிள்ளைகள் செய்யும் பாவங்களால் நமக்கும் மழை இல்லையே என்று பேசிக்கொள்ளுமாம்.

மழை பெற வழி;
1. الاعتصام بالكتاب والسنة : குர்ஆனும், சுன்னாவும் தான் வெற்றியை தரும்.
ان لو إستقام علي الطريقة لاسقيناهم ماءا غدقا                 
2. تقوى الله: ولو إن أهل القرى أمنوا و التقوا لفتحنا عليهم بركات من السماء      
3.   ألإستغفار  : و يقوم إستغفروا ربكم ثم توبوا إليه
4. الشعور بالاضطرار   : ام من يجيب المضطر إذا دعاه و يكشف السوء         
5. நல்லோர்களின் பொருட்டால்:
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள், உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, அப்பாஸிப்னு அப்துல் முத்தலிபின் பொருட்டால் மழை வேண்டினார்கள்.

اللهم إنا نتوسل إليك بنبينا فتسقينا، و إنا نتوسل إليك بعم نبينا فاسقنآ قال فيسقون.

No comments:

Post a Comment