Thursday 25 December 2014

சிறந்து பிறந்த செம்மல் நபி(ஸல்) !


சமுதாயத்தில் வீரியமான பேச்சுக்களால் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்கள் உண்டு. ஊருக்காகவும், பேருக்காகவும் உழைத்த தலைவர்கள் நிறைய உண்டு. ஏன் இலச்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் உண்டு. இவர்களில் எவருமே பிறக்கும்போதே சிறப்போடு பிறக்கவில்லை.  எவருடைய பிறப்பும் எதிர்பார்க்கப்படவும் இல்லை.  இவர் பிறப்பாரென்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்று சொள்ளப்படுமளவு எந்த தலைவர்களும் பிறக்கவுமில்லை. பிறக்காத எந்த தலைவரின் பெயரும் இதுவரை யாருக்கும் பெயராக வைக்கப்படவும் இல்லை.
ஆனால், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் பிறக்கும்போதே சிறப்போடு பிறந்தார்கள். இந்த நபி எப்போது வருவார் என்ற எதிபார்ப்புகளோடு பிறந்தார்கள், கடைசி நபி எங்கள் குடும்பத்தில் வரவேண்டுமென்று, நபி வருவதற்கு முன்னாலேயே முஹம்மது நபியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
எதிர்பார்ப்பு 1:  
                           و إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب و حكمة ثم جآءكم ..........الخ    
ஆன்ம உலகில் நபிமார்களின் ஆன்மாக்களை ஒன்றுகூட்டி உங்களுக்கு பிறகு வரப்போகும் நபியை ஏற்று, அவருக்கு உதவியும் செய்யவேண்டும், என்ன செய்வீர்களா? என்று அல்லாஹ் கேட்டபோது, அந்த ரூஹுகளெல்லாம் கண்டிப்பாக அவரை ஏற்று, அவருக்கு உதவியும் செய்வோம் என்றார்கள்.(03:81)
இறுதி நபியை முதன்முதலாக நபிமார்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எதிபார்ப்பு 2:
                                 و إذ قال عيسي ابن مريم يا بني إسرائل إني رسول الله اليكم ..............الخ 
இஸ்ரவேலர்களே! நான் கொண்டுவந்த வேதத்தையும், என் தூதுவத்தையும் உண்மைபடுத்தும் ஒரு இறைத்தூதர் அஹ்மத் என்ற பெயரில் வரவிருக்கிறார்(61:06) என்ற சுபச்செய்தியை ஈஸா நபி தன் சமூகத்திற்கு சொன்னதின் உள்ளர்த்தம், இறுதி நபியை மக்களும் எதிபார்க்கிறார்கள்.
எதிர்பார்ப்பு 3: 
                       ربنا و ابعث فيهم رسولا منهم يتلوا عليهم ........إلخ
எங்கள் இறைவனே! உன்னுடைய வேதத்தை ஓதிக் காண்பித்து, ஞானத்தை கற்றுத்தரும் ஒரு தூதுவரை வெளிக்கொண்டுவா. என்று இப்ராஹீம் நபி துஆ செய்கிறார்கள். ‘’ஒரு தூதுவரை’’ என்பது நபி (ஸல்) அவர்களையே குறிக்கும். எனவேதான் பின்னொரு காலத்தில் நபியவர்கள், انا دعوة أبي إبراهيم و بشري عيسي و رؤيا امي   நான் இப்ராஹிமின் துஆவாக இருக்கிறேன் என்றார்கள். நபியின் வருகையை இந்த சமூகத்தின் தந்தையான இப்ராஹீம் நபியே எதிர்பார்த்தார்கள்.
எதிர்பார்ப்பு 4: நபி பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னாள்,
 أسعد الحميدي   என்ற அரசன் பல்வேறு நாடுகளை வெற்றி கொண்டு, மக்கா, மதினாவிற்கும் யுத்தம் நாடி வருகிறான். இவ்விரு பூமியின் புனிதத்தையும், இறுதி நபியின் வருகையையும், அவரின் வாழ்விடம் மதினா என்பதையும் அறிந்த மன்னன் யுத்தத்தை கைவிட்டு தன் தாயகம் திரும்பும் வேளை, நாயகம் வந்தால் இதைக் கொடுங்கள் என்று ஒரு கடிதத்தையும் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால்,ஆயுள் வரை, ‘நபியை’ காணும் பாக்கியம் பெறவில்லை. பின்னொரு காலத்தில் நபியவர்கள், ஹிஜ்ரத் செய்து மதினா வந்தபோது அந்தக் கடிதம் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில்,
                شهدت على احمد  انه رسول من  الله باري النسم           
               فلو مد عمري إلى عصره لكنت وزيرا له وبن عم     என்று எழுதப்பட்டிருந்தது.
நபியவர்கள்கூட ஒரு கட்டத்தில் இப்படி கூறினார்கள், لا تسبوأ الطبع أنه أسلم   என்றார்கள். ஆக முஹம்மது நபியின் வருகை ஒன்று மட்டும்தான் எதிபார்க்கப் பட்டது. இந்த எதிர்பாப்பு வேறெவருக்கும் இல்லை.
பரிசுத்தமான பாரம்பரியம்:
و تقلبك في الساجدين     என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனத்திற்கு வாசகம் அமைக்கிற இமாம் ராஜி  அவர்கள், 
كان روحه من الساجدين إلى الساجدين   என்று பதிவு செய்கிறார்கள். நபியின் உயிர், வணக்கசாலிகளுக்குள்ளேயே மாறி மாறி வந்திருக்கிறது. நபியின் பரம்பரையில் ஆதம் (அலை) வரை, யாருமே சிலை வணங்கிகள் கிடையாது.
பிறப்புக்கு முன்; நபியின் தகப்பனாரை பார்க்கும்போதெல்லாம் மக்காவின் பெண்ணொருத்தி உங்களை நான் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறேன் என்பாள். அப்துல்லாஹ் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள், எப்பொழுது ஆமினாவிற்கும் அப்துல்லாஹ்விற்கும் திருமணம் முடிந்ததோ அதன்பிறகு அப்துல்லாஹ்வைப் பார்த்தாலும் பேசாமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள். அவளிடம் அப்துல்லாஹ் கேட்டார்கள். ஏன் இப்பொழுதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை, ஒதுங்கிப் போகிறாய் என்றபோது, அந்தப் பெண் கூறினாள், உங்கள் நெற்றியில் ஒரு ஒளியைப் பார்த்தேன், அந்த ஒளியை அடையவேண்டும் என்பதற்காக உங்களை திருமணம் முடிக்க நாடினேன். அதற்காகத்தான் உங்களைச் சுற்றி சுற்றி வந்தேன், இப்போது அந்த ஒளி உங்களிடமிருந்து போய்விட்டது என்றாள்.
அப்துல்லாஹ், மக்காவில் அழகானவர், ஆமினா அவ்வளவு அழகில்லை, திருமணத்திற்குப் பிறகு ஆமினா அழகுமிக்கவராகவும், அப்துல்லாஹ் அழகு குறைந்தவராகவும் காண ஆரம்பித்தனர், காரணம், அப்துல்லாஹ்வின் உடம்பில் மனித்துளிகளாக நபி இருந்தவரை அப்துல்லாஹ் அழகானவராக இருந்தார், எப்பொழுது நபியவர்கள், ஆமினாவின் கருவறை சென்று விட்டார்களோ அன்றிலிருந்து ஆமினா மெருகேற ஆரம்பித்தார்கள்.

  கி.பி. 570 ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை இந்த அவனியை அலங்கரிக்க அண்ணல் நபி பிறந்தார்கள்.
عثمان بن أبي العاص، عبدالرحمن بن عوف  இவ்விருவரின் தாய்மார்களும் ஆமினா அம்மையாரோடு பிரசவ நேரத்தில் உடனிருந்தவர்கள்.  عبدالرحمن بن عوف ன் தாயார் ஷஃபா அவர்கள் கூறுகிறார்கள். நபியர்களை நான் கையில் வாங்கியதும் எங்கும் ஒளிவெள்ளம். நட்ச்சத்திரங்களெல்லாம் என்னை நெருங்கி வந்தன, என்மேல் விழுந்து விடுமோ என்று நான் பயந்தேன். என்கிறார்கள்.
ஆமினா கூறுகிறார்கள், நபி பிறக்கும் அந்த நேரத்தில் ஒரு அசரீரி அல்லது இல்ஹாம் போடப்பட்டது.
إنك قد حملت بسيد هذه الأمة فإذا وقع إلي الارض فقولي اعيده بالواحد من شر كل حاسد فاذا وقع بسميه محمدا              
மேலும் ஆமினா கூறினார்கள். يطوف به من مشرق إلى المغرب والبحار  என்று சப்தம் கேட்டது. என் பிள்ளையை சில வினாடிகள் காணவில்லை. என்கிறார்கள்.
அதன்பிறகு கஃபாவில் இருந்த அப்துல் முத்தலிபுக்கு செய்தி சொன்னபோது, விரைந்து வந்த அப்துல் முத்தலிப் குழந்தயை தூக்கிக் கொண்டு பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்துவிட்டு வெளியே வந்து முஹம்மத் என்று பெயரும் வைத்தார். சுற்றிலும் இருந்தவர்கள், என்ன முத்தலிப் அவர்களே! இந்தப் பெயர் உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வைக்கப் படவில்லையே! ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று கேட்டபோது,
      أردت أن يحمده الله في السماء وان يحمده الخلق في الأرض என்று கூறினார். எல்லா வகையிலும் சிறப்போடும் அதிசயங்களோடும் ஏந்தல் நபி அவதரித்த இம்மாதத்தை சிறப்புறச் செய்வோமாக!
WWW.alshirazi.com/compilations/.../3.htm  என்ற தலைப்பில் நபியின் பிறப்பு இன்னும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.








  
                                             


No comments:

Post a Comment