செப்டம்பர் 4 ஆசிரியர் தினம்
பாமரனாய் பள்ளிக்குள் நுழைந்த என்னை
பாடசாலைக்குள் பத்திரப் படுத்தி
பாருலகின் பார்வை படாமல் பாதுகாத்து
பாசக் கயிற்றால் பக்குவப் படுத்திய
ஆசான்களே! உங்களுக்கு கோடி நன்றிகள்!
விடுமுறை காலங்களிலும்
தொடுதிரையில் செய்தி அனுப்பி
விடாமல் நலம் விசாரிக்கும்
வெள்ளை உள்ளங்களே! ஆசான்களே!
உங்களுக்கு கோடி நன்றிகள்!
சமுதாய அம்புகள்
என்னை சல்லடையாக்கிய போது
அறிவுக் கேடயத்தால்
பரிவு காட்டிய ஆசான்களே!
உங்களுக்கு கோடி நன்றிகள்!
No comments:
Post a Comment