Thursday 26 December 2013

தெரிந்ததும். தெரியாததும்: ஈஸா (அலை) - ஏசுநாதர்


ஈஸா (அலை) அவர்கள் பிறந்த நாளை (டிசம்பர் 25)கிருஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் குறித்து தெளிவான - சரியான கொள்கையைப் போதிக்கிறது,இஸ்லாம். ஒவ்வொரு முஸ்லிமும் அந்தக் கொள்கையை அறிந்து அப்படியே நம்பவும் வேண்டும்.

குறிப்பாக அதிகமான முஸ்லிம் குழந்தைகள் கிருத்தவப் பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் இந்தக்காலத்தில் ஈஸா (அலை) அவர்கள் பற்றிய விவரங்களை குழந்தகளின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். கிருஸ்துமஸ் நெருங்கி விட்டால் நம்முடைய பிள்ளைகள் கிருஸ்துமஸ் தாத்தா பற்றி பேச ஆரம்பித்து விடுகின்றனர். கிருஸ்துமஸ் கீதம்கிருஸ்துமஸ் மரம் போன்ற தகவல்களையெல்லாம் அறிந்து கொள்கின்றனர். ஆனால் இவையனைத்தும் கிருத்தவ மதம் சார்ந்த விஷயம். கொள்கை சார்ந்த விஷயம்.

இஸ்லாமியக் கொள்கைகள் கிருத்தவப் பிள்ளைகளின் மனதில் பதிவதை எப்படி கிருத்தவர்கள் விரும்பமாட்டார்களோ அதைவிடப் பன்மடங்கு நம்முடைய மனதில் மாற்று மத கொள்கைகள் பதியக்கூடாது. அறிவது என்பது வேறு. நம்புவது என்பது வேறு. இன்று இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் கிருத்தவக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றுவதை நாம் மறுக்க முடியாது.

ஓரிறைக் கொள்கை பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பற்றியும் நம்முடைய குழந்தைகள் எந்த அளவுக்கு தெரிந்திருக்கின்றனர்கிருத்தவ மதம் தொடர்பான தகவல்களை சாதாரணமாக பேசும் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கொள்கைகளை ஏன் படித்துக் கொடுக்கக் கூடாது. கிருஸ்துமஸ் தாத்தா பற்றி பேசும் பிள்ளைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் பறறி ஏன் பேசக்கூடாது?

இயேசு - ஈஸா (அலை) யார்?:
ஈஸா (அலை) அவர்களுக்கு உரிய மரியாதையை இஸ்லாம் கொடுத்திருக்கிறது. அவர் அல்லாஹ்வால் நேர்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட நபி. அவரும் அல்லாஹ்வுடைய ஓர் அடியாரே தவிர கடவுளோ கடவுளின் குழந்தையோ அல்ல. அவர் சிலுவையில் அறையப்படவில்லைபோன்ற ஆதாரப்பூர்வமான கொள்கைகளை மார்க்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அல்லாஹ்வுக்கும் ஒரு குமாரன் இருக்கிறான்என்று சொல்பவர்களை குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது. அந்த மோசமான கொள்கையால் சக்தி வாய்ந்த மலைகளும் ஆடிப்போய் நிற்கின்றனஎன்பது குர்ஆன் கூறும் தகவல்.

கிருத்தவக் கொள்கைகள் முற்றிலும் குர்ஆனுக்கு முரணானவை. ஈஸா (அலை) அவர்களை கிருத்தவர்கள் எப்படி நம்பியிருக்கிறார்கள்என்பதே ஒரு குழப்பமான விஷயம். இயேசு கடவுளாஅல்லது கடவுளின் குமாரரா?முக்கடவுளாஒரு கடவுளாஇறைவன்இயேசுபரிசுத்த ஆவி மூவரும் கடவுள். ஆனாலும் மூன்று பேரும் சேர்ந்து ஒரே கடவுள் தான்என்றும் கூறுகின்றனர். இந்தக் கொள்கைக்கு விளக்கம் சொல்ல வந்த மதத் குருமார்கள் பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். பிரிவுச் சட்டங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் கடவுட்கொள்கையிலேயே முரண்பாடு இருந்தால் அதை என்னவென்று சொல்வது?

முரண்பாட்டின் மொத்த உருவம்:
கிருத்தவர்களில் இபியூனீ பிரிவினர் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று ஏற்றுக் கொண்டால் நம்முடைய ஏகத்துவக் கொள்கையை பாதுகாக்க முடியாது. என்பதால் இயேசு முழுமையான கடவுள் அல்லகடவுளுக்கு ஒப்பானவர்என்று கூறிவிட்டனர். இது போன்று பல பிரிவினர்கள் தோன்றினர்.

ஆறாவது நூற்றாண்டில் யஃகூபி பிரிவினர் தோன்றினர். அவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவன் என்றே வாதிட்டனர். ஆறாம் நூற்றாண்டு இஸ்லாம் தோன்றிய ஆரம்ப காலம். அச்சமயத்தில் இந்த பிரிவினர் மூலம் சிரியா போன்ற நாடுகளில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. நிச்சயமாக அல்லாஹ்மர்யமுடைய மகன் ஈஸா தான்,என்று சொன்னவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள்... என்று அல்குர்ஆன் (5:17) இந்தப் பிரிவினரைச் சாடுகிறது. (நூல்: ஈஸாயிய்யத் கியா ஹே)

ஏசு கடவுளல்ல:
ஈஸா (அலை) அவர்கள் மனிதர் தான்: கடவுளல்லஎன்று சொல்லக்கூடிய பிரிவினர்கள் அவ்வப்போது கிருத்தவர்களிடையே தோன்றத்தான் செய்தார்கள். எனினும் தேவாலயப் பொறுப்பாளர்கள் அவர்களை வளர விடவில்லை. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய arians என்ற பிரிவினர் இயேசு படைக்கப்பட்ட மனிதர் தான் என்று நமபியிருந்தனர். அதற்கு முன் 3 ம் நூற்றாண்டிலேயே இந்தக் கொள்கையுடையவர்கள் தோன்றியிருந்தனர். முவஹ்ஹிதீன் - ஏகத்துவவாதிகள்(untairiansஎன்ற பிரிவினர் இன்றும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவர்களும் ஈஸா (அலை) அவர்களை சிறந்த மனிதராகவே கருதுகின்றனர். கடவுள் என்று சொல்லவில்லை. திரியோகத்துவ - முக்கடவுள் கொள்கையை முற்றிலுமாக மறுக்கின்றனர். (நூல்: யஹுதிய்யதோ நஸ்ரானிய்யத் - தர்யாபாதி)

உண்மையைச் சொல்லும் இன்ஜீல்:
கிருத்தவ மதத்தில் முக்கிய நபராக கருதப்படும் பவுல் என்பவருக்கும் ஈஸா (அலை) அவர்களுடன் இருந்த பர்னபாஸ் ஹவாரி என்பவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த பவுல் ஈஸா (அலை) அவர்களுடைய உண்மை நிலையை மறைத்து விட்டதால் இந்தப் பிரிவினை ஏற்பட்டது. இன்று பவுல் சொல்லி வைத்தவை தான் கிருத்தவக் கொள்கையாக உள்ளன.

ஈஸா நபிக்கு இறக்கப்பட்ட இன்ஜீலை இன்று பார்க்க முடியாது. ஈஸா (அலை) அவர்களுக்குப் பின் பல பைபிள்கள் தோன்றின. எனினும் நான்கு பேர் எழுதிய நூற்களுக்கு மட்டுமே புதிய ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. மற்றவற்றை கிருத்தவத் தலைமை நிராகரித்து விட்டது. இதற்கிடையே பர்னபாஸ் ஹவாரி எழுதிய (கிருத்தவர்கள்உலகை விட்டும் மறைத்துவிட்ட) ஒரு பைபிள் (ஏறத்தாழ 250 வருடங்களுக்கு)  முன்னால் கண்டெடுக்கப்பட்டது. இந்த பைபிள் கிருத்தவ உலகையே நடுநடுங்கச் செய்துவிட்டது. ஏனெனில் அதில் கிருத்தவ மதத்தின் கொள்கைள் உடைத்தெறியப் பட்டுள்ளன.

ஈஸா நபி பற்றிய உண்மையான தகவல்கள் கூறப்பட்டுள்ளனஎன்பது மட்டுமல்லாது அதில் இறுதி நபி முஹம்து (ஸல்) அவர்களுடைய கண்ணியமான பெயரும் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி கடவுளோ கடவுளின் குமாரரோ இல்லை. மேலும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அல்லாஹ் அவரை வானுலகிற்கு உயர்த்திவிட்டான்போன்ற சத்தியமான கருத்துக்களும் பர்னபாஸுடைய இன்ஜீலில் கூறப்பட்டுள்ளன. ஆனால் இன்றோ இந்த இன்ஜீலை எழுதியது ஒரு முஸ்லிம் என்று பேசப்படுவது எவ்வளவு பெரிய வேடிக்கையான சேதி? (ஈஸாயிய்யத் கியா ஹே?)

சத்தியத்தை எடுத்துச் சொல்லி கிருத்தவர்களை விளங்க வைக்க வில்லையானாலும் அவர்கள் விரிக்கும் வலையிலிருந்து நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சிலுவை யுத்தத்தில் தோற்றபின் ஆயுதத் தாக்குதலை கலாச்சாரத் தாக்குதலாக மாற்றியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஃபிரான்ஸிலிருந்து வெளியான ஒரு நூலில் இப்படி கூறப்பட்டுள்ளது: 13 ம் நூற்றாண்டின் இறுதியில் சிலுவை யுத்தம் முடிந்துவிட்டாலும் ஐரோப்பிய சிந்தனையில் சிலுவைக் கலாச்சாரம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. (அல்ஹவார் பைனல் அத்யான்)
எனவேகிருத்தவக் கலாச்சாரத்தையும் கொள்கைகளையும் முஸ்லிம்களிடம் திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை கிருத்தவர்களாக மாற்றும் வேலையும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. எனவே விசுவாசிகளே! (மிக எச்சரிக்கையாக இருந்து) உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் - 66:5) இல்லையெனில் தலையில் கூடை நிறைய பிரியாணியை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தில் பிச்சை எடுத்த கதையாகத் தான் நம் நிலை ஆகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
                              நன்றி; நிஜாமுதீன் யூசுபி

No comments:

Post a Comment