Thursday 29 August 2013

இறையருள் இல்லையேல், நிறை வாழ்வு இல்லை!




மனித சமூகத்தின் உருவாக்கம் முதற்கொண்டு, மண்ணாகி மக்கிப்போன பிறகும் அல்லாஹ்வின் அருள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.
அவனது ரஹ்மத் இப்பூவுலகில் ஒரு நிமிடம் இல்லையென்றாலும் இந்த உலகம் கரிந்து சாம்பலாகிவிடும்.
رحم  லும் رحمة  வேண்டும்:
பொதுவாக படைப்புகள் மூன்று கட்டங்களாக பிரிகின்றன.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُخَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ﴿١٤
               1.  மண், விந்து, ரத்தம்.
                           2.       சதை, எலும்பு, மாமிசம்.
3.      ثُمَّ أَنْشَأْنَاهُخَلْقًا آخَرَ
இதில் முதல் இரண்டு கட்டத்தில் மனிதனுக்கும்,மிருகத்திற்கும் எவ்வித மாறுபாடும் இருப்பதில்லை. இறைவனின் கூற்றுப்படி வேறு ஒரு படைப்பாக, அதுவும் அழகிய மனிதப் படைப்பாக அல்லாஹ் படைத்திருக்கிறான் என்றால் அவனின் ரஹ்மத் இல்லாமல் இது சாத்தியமாகுமா? அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டும் தாயின் கருவில் இல்லையென்றால் உருவில் நாம் நாயோ, பன்றியோ! யாரறிவார்? எனவேதான் رحم  லும் رحمة  வேண்டும்.
தாயன்புக்கும் தயாளனின் அருள் வேண்டும்:
பெற்ற பிள்ளையை குப்பையில் வீசிவிட்டுப் போகிற தாய்மார்களில் என்தாய் எவ்வளவு உயர்ந்தவள்!.
கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்படுகிற பெண்பிள்ளைகளில் என்சகோதரியை பெற்று, ஆளாக்கி, நல்ல வரன் பார்த்து கட்டிக் கொடுத்த என்தாயன்பு இறைவனின் அருளில்லையா?!
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு; பிள்ளைகளை விட்டுவிட்டு இன்னொருவனோடு ஓடிபோய்விட்ட தன் மனைவியை தன்னோடு சேர்த்துவைக்குமாறு கணவன் வழக்குத் தொடுக்கிறான். விசாரணைத் தொடர்கிறது. கனம்நீதிபதி அவர்களே! எனக்காக இல்லையென்றாலும் என் மூன்றுவயது பிள்ளைக்காகவாவது என்மனைவியை என்னோடு அனுப்பி வையுங்கள். உனக்கெல்லாம் வெட்கமாய் இல்லை!  மனைவி கேட்டாள், இன்னொருவனோடு ஓடிப்போய் குடும்பம் நடத்தி வருகிறேன், என்னை மறுபடியும் அழைக்காதே. நீயும் வேண்டாம், உன் பிள்ளைகளும் வேண்டாம் என்றாள். தாயன்புக்கும் தயாளனின் அன்பு வேண்டும் என்பது எவ்வளவு உண்மை.
மரணத்திலும் அவனது அருளெனும் இரணம் வேண்டும்:
நபியின் அந்திமகாலம். ஆயிஷாவிடம் நபியவர்கள் கூறினார்கள். கைபரில் இன்ன யூதப் பெண்மணி கொடுத்த விஷத்தின் வீரியத்தை இப்போது நான் உணருகிறேன் என்றார்கள். ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். நபி ஏதோ முனகுவது போன்று தெரிந்தது. நபியின் வாயருகே நான் காது கொடுத்து கேட்டபோது اللهم اغفرلي وارحمني اللهم بالرفيق الاعلى என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நபியின் இந்த வார்த்தைகள், மரணத்திலும் அல்லாஹ்வின் அருள்வேண்டும் என்பதை உணர்த்துகிறதல்லவா?! 
உமர் ரலியின் அந்திமகாலம். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயம். மகனின் மடியில் தலைவைத்திருந்தவர்கள், மகனே! என்தலையை உன் மடியிலிருந்து எடுத்து கீழே வை. என்றார்கள். ஏனெனில்لعلي الله يرحمني என்றார்கள். உமரின் இந்த வார்த்தைகள், மரணத்திலும் அல்லாஹ்வின் அருள்வேண்டும் என்பதை உணர்த்துகிறதல்லவா?!  

ولما طعن عمر
.. جاء عبدالله بن عباس , فقال .. : يا أمير المؤمنين , أسلمت حين كفر الناس , و جاهدت مع رسول الله صلى الله عليه و سلم حين خذله الناس , و قتلت شهيدا و لم يختلف عليك اثنان , و توفي رسول الله صلى الله عليه و سلم و هو عنك راض .
فقال له : أعد مقالتك فأعاد عليه , فقال : المغرور من غررتموه , و الله لو أن لي ما طلعت عليه الشمس أو غربت لافتديت به من هول المطلع . 
و قال عبدالله بن عمر : كان رأس عمر على فخذي في مرضه الذي مات فيه .
فقال : ضع رأسي على الأرض .
فقلت : ما عليك كان على الأرض أو كان على فخذي ؟!
فقال : لا أم لك , ضعه على الأرض .
فقال عبدالله : فوضعته على الأرض .
فقال : ويلي وويل أمي إن لم يرحمني ربي عز و جل.

சக்ராத் என்பது பேராபத்துக்குண்டான நேரம். நம்மில் யாராவது சக்ராத்தை உணர்ந்தவர்கள் உண்டா?
முதன்முதலாக சூர் ஊதப்படும் போது, எல்லா உயிரினங்களும் அழிந்துவிடும். அல்லாஹ் கேட்பான். இன்னும் யார்  மீதம் இருக்கிறார்கள். அதற்கு மலைக்குள் மவ்த் கூறுவார். ரப்பே! ஜிப்ரயீல்,மீக்காயீல்,இஸ்ராபீல் மற்றும் அர்ஷை சுமக்கும் மலக்குகள் இவர்கள்தான் மீதம் என்பார். பிறகு அவர்களின் ரூஹ்களும் வாங்கப்படும். பிறகு அல்லாஹ் கேட்பான். இன்னும் யாரிருக்கிறார்கள்? மலக்குள் மவ்த் கூறுவார். ரஹ்மானே! நீயும்,நானும் மட்டுமே என்பார். 
 ثم  يأمر الله تعالى إسرافيل عليه السلام أن ينفخ نفخة الصعق، فينفخ، فيموت من فيها كما قال الله تعالى: "ونفخ
 فيالصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله". يعني سبحانه وتعالى جبرائيل و ميكائيل و إسرافيل وملك الموت وحملة العرش. فيأمر الله تعالى ملك الموت بأن يقبض أرواحهم، فيقبض أرواحهم. ثم يقول الله تعالى يا ملك الموت من بقي من خلقي ؟  فيقول: يا رب، بقي العبد الضعيف، ملك الموت. فيقول الله تعالى: يا ملك الموت، ألم تسمع قولي: "كل نفس ذائقة الموت" ؟ اقبض روح نفسك. فيجيء ملك الموت إلى موضع بين الجنة والنار وينزع روحه. فيصيح صيحة، لو كان الخلق كلهم أحياء لماتوا من صيحته، فيقول: لو علمت ما للموت من الشدة و الألم ما قبضت أرواح المؤمنين إلا بالرفق، ثم يموت، فلا يبقى أحد من الخلق. فتبقى الأرض خرابا أربعين سنة،

மரணத்திற்குப் பிறகும் அல்லாஹ்வின் அருள் வேண்டும்:
நபியவர்கள் கூறினார்கள், எவரும் தங்களின் அமலைக் கொண்டு சுவர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வின் அருள் இருந்தால்தான் சுவர்க்கம் செல்ல முடியும் என்றார்கள். நபியே! இந்த நியதி உங்களுக்கும் பொருந்துமா?! என்றபோது, ஆம்! அல்லாஹ் தன் அருளால் என்னைப் போர்த்த வில்லையென்றால் நானும் அப்படித்தான் என்றார்கள். 
அல்லாஹ் தன் அருளால் நம் அனைவரையும் போர்த்திக் கொள்வானாக!
       












1 comment: